மகள் திருமணம் முடிந்த 4 நாட்களிலேயே.. சத்ருகன் சின்ஹா வீட்டில் இப்படி ஒரு சம்பவமா?

Jul 01, 2024,11:13 AM IST

மும்பை : நடிகர் சத்ருகன் சிஹாவின் மகளும், பிரபல நடிகையுமான சோனாக்ஷி சின்ஹாவிற்கு திருமணம் முடிந்து நான்கு நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் அவர்களின் வீட்டில் நடந்துள்ள சம்பவம் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் அனைவரையும் பதற்றமடைய வைத்துள்ளது.


சத்ருகன் சின்ஹா, திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தான் அனைவரின் பதற்றத்திற்கும் தற்போது காரணமாக அமைந்துள்ளது. மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்ருகன் சின்ஹா, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மையில்லையாம். தற்போது அவருக்கு என்ன நடந்தது என்ற உண்மை காரணம் வெளியாகி உள்ளது.




கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடிகர் சத்ருகன் சின்ஹா, தன்னுடைய வீட்டின் டைனிங் டேபிளில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். அவருக்கு பிடித்தமான இடம் இது தானாம். அவரது பெரும்பாலான பேட்டிகளும் இந்த இடத்தில் அமர்ந்து தான் கொடுத்திருப்பார். அப்படி அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது அருகில் புதிதாக திருமணமான மகள் சோனாக்ஷி சின்ஹாவும் இருந்துள்ளார். 


நன்றாக பேசிக் கொண்டிருந்த சத்ருகன் சின்ஹாவிற்கு திடீரென விலா எலும்பு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் தடுமாறிய அவரை அருகில் இருந்த சோனாக்ஷி சின்ஹா தாங்கி பிடித்துள்ளார். உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு, அவரை பரிசோதனை செய்து, ஓய்வு எடுக்கும் படி அறிவுறுத்தி உள்ளனர். இருந்தாலும் சத்ருகன் சின்ஹாவிற்கு தொடர்ந்து வலி இருந்து வந்துள்ளது. மறுநாள் காலை வரை அவருக்கு வலி குறையாமல் இருந்ததால் டாக்டர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் படி அறிவுறுத்தி உள்ளனர்.


சத்ருகன் சின்ஹாவிற்கு உள்ளுறுப்புகளில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு அனைத்து டெஸ்ட்களும் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால்  டாக்டர்கள் சந்தேகப்பட்டது போல் அவருக்கு உள்ளுறுப்பு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என கண்டறியப்பட்டது. இதனையடுத்து இன்று (ஜூலை 01)மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. சத்ருகன் சின்ஹா தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்