மும்பை : நடிகர் சத்ருகன் சிஹாவின் மகளும், பிரபல நடிகையுமான சோனாக்ஷி சின்ஹாவிற்கு திருமணம் முடிந்து நான்கு நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் அவர்களின் வீட்டில் நடந்துள்ள சம்பவம் குடும்பத்தினர்கள், உறவினர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் அனைவரையும் பதற்றமடைய வைத்துள்ளது.
சத்ருகன் சின்ஹா, திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தான் அனைவரின் பதற்றத்திற்கும் தற்போது காரணமாக அமைந்துள்ளது. மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்ருகன் சின்ஹா, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மையில்லையாம். தற்போது அவருக்கு என்ன நடந்தது என்ற உண்மை காரணம் வெளியாகி உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடிகர் சத்ருகன் சின்ஹா, தன்னுடைய வீட்டின் டைனிங் டேபிளில் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். அவருக்கு பிடித்தமான இடம் இது தானாம். அவரது பெரும்பாலான பேட்டிகளும் இந்த இடத்தில் அமர்ந்து தான் கொடுத்திருப்பார். அப்படி அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது அருகில் புதிதாக திருமணமான மகள் சோனாக்ஷி சின்ஹாவும் இருந்துள்ளார்.
நன்றாக பேசிக் கொண்டிருந்த சத்ருகன் சின்ஹாவிற்கு திடீரென விலா எலும்பு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் தடுமாறிய அவரை அருகில் இருந்த சோனாக்ஷி சின்ஹா தாங்கி பிடித்துள்ளார். உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு, அவரை பரிசோதனை செய்து, ஓய்வு எடுக்கும் படி அறிவுறுத்தி உள்ளனர். இருந்தாலும் சத்ருகன் சின்ஹாவிற்கு தொடர்ந்து வலி இருந்து வந்துள்ளது. மறுநாள் காலை வரை அவருக்கு வலி குறையாமல் இருந்ததால் டாக்டர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் படி அறிவுறுத்தி உள்ளனர்.
சத்ருகன் சின்ஹாவிற்கு உள்ளுறுப்புகளில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு அனைத்து டெஸ்ட்களும் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் டாக்டர்கள் சந்தேகப்பட்டது போல் அவருக்கு உள்ளுறுப்பு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என கண்டறியப்பட்டது. இதனையடுத்து இன்று (ஜூலை 01)மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. சத்ருகன் சின்ஹா தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}