அவள் தான் எங்கள் ஆனந்தஜோதி...!

Dec 22, 2025,10:50 AM IST

- வ. சரசுவதி


ஆலமரம் போல் நண்பர்கள்

பரந்து விரிந்து பல பேர்


ஆனாலும் என் கேளன் இல்லாமல் 

தற்பொழுது நான்..


அவளோ  எனக்காகவே

நானோ அவளுக்காகவே 


பள்ளி நாட்களிலும் அவளுடன் 

கல்லூரி நாட்களிலும் அவளுடன் 


சில நாட்கள் இடைவெளியில்...




தேடிய ஏக்கம் தீரவே 

பேரூந்தில் சந்தித்த நாளோ  நினைவில்..


மறக்கமுடியுமா?


அருகருகே பணியில் அமர 

மாணவர்களுக்காகவே கலந்துரையாடல்கள் பல 


 நாட்கள் நகர நகர

திடுக்கிடும் தகவல் வர 


ஓடிப்போய் பார்க்க !


ஆனந்தமாய் சுற்றித்திரிந்த 


அவளோ மௌனமாய்..


பல நாட்கள் படுக்கையில் படுத்திருக்க

கலையுமா அவள் மௌனம் என காத்திருக்க


பொறுக்கலையோ அந்த ஆண்டவனுக்கு


ஆம்...


என் அருமையான கேளனோ .....


ஒரு டிசம்பர் திங்கள் கடைசி நாளில்

அமைதியாய் உறங்கிப்போனாள் 


நாடே புத்தாண்டு மகிழ்ச்சியில் இருக்க

நானும் என் மற்றொரு கேளனும் 


மௌனமாய் வழி அனுப்பி விட்டு....


நாங்கள் மட்டும் இன்னும் 

அவளின் நினைவுகளுடன்


நகர்ந்து கொண்டே...


அவளின்ஜோதியுடன் 

பேசிக்கொண்டுள்ளோம்


ஆம் !


அவள் தான்  எங்கள் ஆனந்தஜோதி...


(வ.சரசுவதி. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள் படைத்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Iran War: ஈரான் மீதான போர் நிறுத்தி வைப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

news

அதிமுக கூட்டணியில் பாஜக-27, அமமுக-11, பாமக -18 தொகுதிகள் ஒதுக்கீடு

news

நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்

news

ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்

news

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

news

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வராத ஜி.கே.வாசன்...காரணம் இது தானா?

news

வீரத்தின் அடையாளம்.. மறக்க முடியாத பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!

news

திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

திருத்துறைப்பூண்டி பொன்னிறை புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா

அதிகம் பார்க்கும் செய்திகள்