- சசிகலா விஸ்வநாதன்
ஒரு மிடறு நீர் போதும்
என் விடாய்
தணிந்து விடும்.
குடுவை நீரில்
ஒரு கோப்பை;
ஏன் தர மறுக்கிறாய்?
ஒரே ஒரு சொல் போதும்
என் வெறுமை களைய,
ஒரு நூறு கவிதை பாடும் வாயினால்
ஒரு சொல் எனக்காக உதிராதா?

ஒரே ஒரு பார்வை போதும்
என் உயிர் துளிர் விட;
வெற்றுப் பார்வை விட்டு
சற்றே கனிவுடன்
ஒரு பார்வை
என் உயிர் தங்குமே!
ஒரே ஒரு தீண்டல் போதும்;
என் நம்பிக்கை நீள;
ஒரு தொடுகையில்
'நான் இருக்கிறேன்'
என்று
இயம்பலாகாதா?
ஆகும்!
ஆகாதெல்லாம் ஆகும்!
நீ நீயாக இருந்தால் மட்டுமே ஆகும்!
அதற்கு,
நீ நானாக வேண்டும்!
மனப்பிணக்கம் விட்டு!
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. என்ன திட்டத்தில் இருக்கிறார் நடிகர் லாரன்ஸ்?
இந்திரஜித்!
ஒரு மிடறு!
Tamil Poem: செல்லக்குட்டி வெல்லக்கட்டி!
{{comments.comment}}