சென்னை: ரஜினியை சந்தித்த சிம்ரன், ரஜினியுடனான சந்திப்பு காலத்தால் அழியாதவை என்று நெகிழ்ச்சி பதிவை பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகர் சிம்ரன். இவர் ரசிகர்களின் கனவுகன்னியாக வலம் வந்தவர். விஜய், அஜித், கமல், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் இணைந்து நடித்தார். பேட்ட படமும் பெரிய வெற்றியை பெற்றது என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில், சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை அழைத்து பாராட்டினார் நடிகர் ரஜினி. அப்போது சிம்ரன் மும்பையில் இருந்ததால் அவர் ரஜினியை சந்திக்கவில்லை. தற்போது ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார் சிம்ரன். இது தொடர்பான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த படங்கள் தற்போது வைராகி இணையத்தில் பரவி வருகிறது.
மேலும், ரஜினியுடனான சந்திப்பு குறித்து சிம்ரன் தனது எக்ஸ் தள பதிவில், சில சந்திப்புகள் காலத்துக்கு அப்பாற்ப்பட்டது. சூப்பர் ஸ்டாருடன் ஒரு அழகான தருணத்தை பகிர்ந்ததற்காக நன்றியுள்ளவளாக இருக்கிறேன். டூரிஸ்ட் பேமிலி மற்றும் கூலி படத்தின் வெற்றிகள் இந்தச் சந்திப்பை இன்னும் சிறப்பானதாக மாற்றின என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}