சென்னை: ரஜினியை சந்தித்த சிம்ரன், ரஜினியுடனான சந்திப்பு காலத்தால் அழியாதவை என்று நெகிழ்ச்சி பதிவை பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகர் சிம்ரன். இவர் ரசிகர்களின் கனவுகன்னியாக வலம் வந்தவர். விஜய், அஜித், கமல், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் இணைந்து நடித்தார். பேட்ட படமும் பெரிய வெற்றியை பெற்றது என்பது நாம் அறிந்ததே.
இந்நிலையில், சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை அழைத்து பாராட்டினார் நடிகர் ரஜினி. அப்போது சிம்ரன் மும்பையில் இருந்ததால் அவர் ரஜினியை சந்திக்கவில்லை. தற்போது ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார் சிம்ரன். இது தொடர்பான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த படங்கள் தற்போது வைராகி இணையத்தில் பரவி வருகிறது.
மேலும், ரஜினியுடனான சந்திப்பு குறித்து சிம்ரன் தனது எக்ஸ் தள பதிவில், சில சந்திப்புகள் காலத்துக்கு அப்பாற்ப்பட்டது. சூப்பர் ஸ்டாருடன் ஒரு அழகான தருணத்தை பகிர்ந்ததற்காக நன்றியுள்ளவளாக இருக்கிறேன். டூரிஸ்ட் பேமிலி மற்றும் கூலி படத்தின் வெற்றிகள் இந்தச் சந்திப்பை இன்னும் சிறப்பானதாக மாற்றின என்று தெரிவித்துள்ளார்.
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் அலர்ட்!
ரஜினியை சந்தித்த சிம்ரனின் நெகிழ்ச்சி பதிவு... இணையத்தில் வைரல்!
2026ல் தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது: விசிக தலைவர் திருமாவளவன்
வாட்ஸ்ஆப்பில் வந்த இன்விடேஷன்.. பட்டுன்னு திறந்த அரசு ஊழியர்.. பொட்டுன்னு போன ரூ. 2 லட்சம்!
வரலட்சுமியின் மறைவுக்கு கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
இந்தி மொழியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Coffee lovers pl listen.. அதிகாலையில் காபி குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு... கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!
2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!
{{comments.comment}}