- அ.தாமஸ்
பத்து மாதங்கள் குழந்தையைத் தன் வயிற்றில் சுமந்த தாய்க்கும் பிரசவம் என்னும் பிரிவில் கூட அது வலிக்கத்தான் செய்கிறது மீண்டும் அக்குழந்தையைத் தன் கரங்களில் தாங்கி முத்தமிடும் வரை.
பிரசவ வலி வேண்டுமானால் பெண்ணுக்கு உரியதாக இருக்கலாம் ஆனால் பிரிவின் வலி பெண்ணுக்கு நிகராய் ஆணும் இருக்கவே செய்கிறது.
பிள்ளைகளின் நலனுக்காய் பொருளீட்ட நெடுந்தூரம் பயணிக்கும் தந்தை ஊரின் எல்லையில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து ஊரையும் , தன்னைப் பிரிய முடியாமல் கலங்கி நிற்கும் உறவுகளின் துயரையும் கண்டு இதயம் கனத்து கண்கள் கலங்கினாலும் தன் துயரை ஒரு துளியும் வெளிப்படுத்தாமல் சிரித்த முகத்துடனே அவர்களை மீண்டும் சந்திக்கும் நினைவோடு பிரியும் அந்த பிரிவுக்கு நிகரேது.

இந்த வலியை சந்திக்காத சிந்திக்காத மனிதர்களே இல்லை இருந்தும் சிறு புன்னகையுடன் கடந்து போவதற்கு தான் உலகின் உயரிய வலிமை தேவைப்படுகிறது.
அந்தப் பிரிவின் வலியை புன்னகையோடு சுமக்கப் பழகினால் வாழ்க்கை சுகமாகும் இல்லையேல் அதுவே பெரும் சுமையாகும்.
இன்றைய பிரிவை நினைத்து கலங்கி நிற்காமல் இப்பிரிவு தான் நாளைய நம் மகிழ்ச்சியின் திறவுகோல் என்பதை உணர்ந்து நேற்றைய நினைவையும்,நாளைய இணைவையும் நினைத்து மகிழ்வோடு பயணிப்போம். ஆம் இப்பிரிவு தான் நம் உணர்வையும், உறவையும் உறுதிப்படுத்தி உள்ள அன்பில் நிலைநிறுத்தும்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}