விருதுநகர்: சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பலியாகியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காளையார் குறிச்சி கிராமத்தில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 80க்கும் மேற்பட்ட அறைகளில் 200 அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வழக்கம் போல் இன்றும் தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். அப்போது அறை எண் 62ல் வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிதம்பராபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் (45), முத்துவேல் (45) ஆகிய இருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சித்தமநாயக்கன் பட்டியைச் சேர்ந்த சரோஜா, செவலூரைச் சேர்ந்த சங்கரவேல் ஆகியோர் 60 சதவீத தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்து வந்த எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.முதற்கட்ட விசாரணையில், பட்டாசு தயாரிக்கும் போது உராய்வ ஏற்பட்டு வெடிவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}