திருச்செந்தூர் : கந்தசஷ்டி விழாவின் நிறைவாக இன்று சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற உள்ளது. கந்தசஷ்டியின் ஆறு நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்களும் இந்த நாளில் விரதம் இருந்து முருகப் பெருமானை மனதார வழிபட்டால் கந்தசஷ்டி விரதம் இருந்த முழு பலனை பெற முடியும்.
முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கு இருக்கப்படும் சிறப்பான விரதம் சஷ்டி விரதம். ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியை மகா கந்தசஷ்டி என அழைப்பதுண்டு. இதுவரை சஷ்டி விரதமே இருந்தது கிடையாது என்பவர்களும் கூட இந்த ஆறு நாட்களும் விரதம் இருந்து முருகனின் அருளை பெற முடியும். ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமையில் துவங்கி, சஷ்டி வரையிலான ஆறு நாட்கள் கந்தசஷ்டி விரதம் கடைபிடிக்கப்படும். சஷ்டி திதி அன்று மாலை முருகப் பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறும். இதை தரிசித்த பிறகு சிலர் விரதத்தை நிறைவு செய்து கொள்வார்கள்.
கந்தசஷ்டியின் ஆறு நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆறாவது நாளான சூரசம்ஷாரத்தன்று மட்டும் கூட விரதம் இருக்கலாம். சூரசம்ஹாரமான இன்று காலை முதல் உணவு ஏதும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். குழந்தைக்காக விரதம் இருப்பவர்கள் காலையில் 2 மிளகு, மதியம் 2 மிளகு, மாலை 2 மிளகு என 6 மிளகுகளை மட்டும் உணவாக எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். காலையில் வீட்டில் விளக்கேற்றி வைத்து முருகனை மனதார வேண்டிய விரதத்தை துவக்கலாம்.
திருச்செந்தூரில் மாலை 04.30 மணிக்கு பிறகு தான் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். மாலை 6 மணிக்குள் சூரசம்ஹாரம் நிறைவடைந்து விடும். சூரசம்ஹாரம் முழுவதுமாக நிறைவடைந்த பிறகு விரதம் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக தலைக்கு குளிக்க வேண்டும். பிறகு வீட்டில் விளக்கேற்றி, முருகப் பெருமானுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி ஆகிய இனிப்புகள் செய்து நைவேத்தியமாக படைக்கலாம். முடியும் என்கிறவர்கள் ஆறு வகையான சாதம் படைத்து வழிபடலாம். ஒரு நாள் விரதம் இருப்பவர்கள் சுவாமிக்கு படைத்த பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். ஆற நாள் கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் நவம்பர் 08ம் தேதியான நாளை திருக்கல்யாணம் முடிந்த பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
சூரசம்ஹாரம் அன்று முருகப் பெருமானின் அருளை பெற கந்தசஷ்டி கவசம் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். கந்தகுரு கவசம், வேல் மாறல், திருப்புகழ் என எது வேண்டுமானாலும் படிக்கலாம். இது எதுவும் முடியாதவர்கள் ஓம் சரவண பவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தை முடிந்த வரை சொல்லிக் கொண்டே இருக்கலாம். அதுவும் முடியாதவர்கள் முருகா...முருகா என சொல்லிக் கொண்டே இருக்கலாம். முருகன் என்னும் திருநாமமே மிகப் பெரிய மந்திர சொல் ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}