மியாமி: அமெரிக்காவில் அடுத்தடுத்து நடிகைகள் மரணமடைந்து வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சோபியா லியோன் என்ற 26 வயது போர்ன் நடிகை தனது வீட்டில் மூச்சுப் பேச்சின்றி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் இறந்து விட்ட தகவலை அவரது வளர்ப்புத் தந்தை மைக் ரோமிரோ தெரிவித்துள்ளார். மியாமியில் கடந்த 1997ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தவர் சோபியா லியோன். ஆபாசப் படங்களில் நடித்து வந்தார். அவரது குடும்பம் நிதி நெருக்கடியில் உள்ளதாம்.
இந்த நிலையில் சோபியா லியோன் இறந்திருப்பதால், அவரது ஈமச் சடங்குகளைச் செய்யக் கூட போதிய பணம் இல்லாமல் தவிப்பதாக மைக் ரோமிரோ தெரிவித்துள்ளார். அதற்குத் தேவையான நிதியுதவி செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சோபியா லியோன் மரணம் குறித்து உள்ளூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சோபியா லியோன் மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்தார். 18 வயதிலேயே ஆபாசப் பட நடிகையாக அவர் மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக அமெரிக்காவில் நடிகைகள் பலர் அடுத்தடுத்து இறந்து வருகின்றனர்.
ஒரே வருடத்தில் 4வது நடிகை மரணம்
இந்த ஆண்டில் இறந்துள்ள 4வது நடிகை இவர். இதற்கு முன்பு காக்னி லின் கார்டர், ஜெஸ்ஸி ஜேன் மற்றும் தைனா பீல்ட்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம். இறந்த நான்கு பேருமே ஆபாசப் பட நடிகைகள் என்பது அதிர்ச்சி கலந்த ஒற்றுமையாக உள்ளது. அடுத்தடுத்து நடிகைகள், அதிலும் ஆபாசப் பட நடிகைகள் உயிரிழந்து வருவது அமெரிக்க திரையுலகில் பேசு பொருளாக மாறியுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}