சென்னை: தமிழ் சினிமாவில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் அத்தனை பேருக்கும் டஃப் கொடுத்து, தொடர்ந்த மாஸ் ஹீரோக்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான் என உலக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் சினிமாவில் உச்ச நடிகராக வளர்ந்த பிறகு தான் திருமணம் செய்து கொண்டார். 1981ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி லதா ரஜினிகாந்த்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் முதல் சந்திப்பிலேயே காதல் மலர்ந்தது. இவர்களின் முதல் சந்திப்பும், ரஜினிகாந்த் காதலை சொன்ன விதமும் சுவாரஸ்யமானது.
தில்லு முல்லு படம் ரிலீசான சமயத்தில் எத்திராஜ் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் குழு ஒன்று ரஜினிகாந்த்தை பேட்டி எடுக்க வேண்டும் என வந்தது. அந்த குழுவில் ஒருவராக வந்தவர் தான் லதா. அத்தனை பேர் கேள்வி கேட்டாலும், லதா கேட்ட கேள்விகளும், அவரின் அழகும், புத்திசாலித்தனமும் ரஜினியை ஈர்த்தது. சினிமா பற்றி பல கேள்விகள் கேட்ட லதா கடைசியாக, திருமணம் பற்றி கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த ரஜினி, உங்களை போன்ற ஒரு பெண் கிடைத்தால் உடனடியாக திருமணம் தான் என கேள்விக்கான பதிலுடன் மறைமுகமாக தனது காதலையும் வெளிப்படுத்தி உள்ளார். அதற்கு பிறகு லதா யார் என விசாரிக்க துவங்கினார் ரஜினி. விசாரித்ததில் அவர் நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் உறவினர் என தெரிய வந்தது. ஏற்கனவே சினிமாவில் ஒய்.ஜி.மகேந்திராவிற்கும் ரஜினிக்கும் நல்ல நட்பு இருந்ததால், லதா மீது ஏற்பட்ட காதல் குறித்தும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவது பற்றியும் ஒய்.ஜி.மகேந்திராவிடம் நேரடியாக சொன்னார் ரஜினி.
இந்த தகவல்கள் எப்படியோ பத்திரிக்கைகளில் பரவ, பத்திரிக்கையாளர்களை அழைத்து நேரடியாக லதாவை திருமணம் செய்து கொள்ள போவதை அறிவித்தார் ரஜினி. பிறகு மிக எளிமையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ள இவர்களின் திருமணம் நடைபெற்றது. அன்று இணைந்த இவர்களின் வாழ்க்கை இன்று வரை மகிழ்ச்சிகரமாக இணை பிரியாமல் சென்று கொண்டிருக்கிறது. திரை தம்பதிகளில் ஆதர்ஷ தம்பதிகள் என்றும் பெயர் வாங்கியவர்கள் ரஜினி - லதா ரஜினி தம்பதி.
ரஜினியும், லதா ரஜினிகாந்த்தும் தங்களின் 43வது திருமண நாளை பிப்ரவரி 26ம் தேதியான நேற்று வீட்டில் எளிமையாக கொண்டாடி உள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட போட்டோவை இவர்களின் மகன் செளந்தர்யா ரஜினிகாந்த் சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு அவர் பதிவிட்டுள்ள கேப்ஷனில், 43 வருடங்களாக அன்பான தம்பதிகளாக, எல்லா சூழ்நிலையில் ஒன்றாக நிற்கும் என்னுடைய அன்பான அப்பா மற்றும் அம்மாவிற்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமல்ல ஒவ்வொரு திருமண நாளின் போதும் 43 ஆண்டுகளுக்கு முன் லதா ரஜினிகாந்த்தின் வீட்டின் சார்பில் இவர்களுக்கு திருமண பரிசாக வழங்கப்பட்ட மோதிரம், தங்க சங்கிலி ஆகியவற்றை அணிந்து கொள்வது இருவரின் வழக்கமாம். இந்த மோதிரம், சங்கிலி அணிந்தபடி ரஜினியும், லதா ரஜினியும் போஸ் கொடுத்த போட்டோவை தான் செளந்தர்யா பகிர்ந்துள்ளார்.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}