தென் ஆப்பிரிக்காவிலிருந்து.. மத்தியப் பிரதேசத்திற்கு வரும்.. 12 சிறுத்தைகள்!

Feb 17, 2023,04:26 PM IST
போபால்: தென் ஆப்பிரிக்காவிலிருந்து 12 சிறுத்தைகள், மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு பிப்ரவரி 18ம் தேதி வருகின்றன.



12 சிறுத்தைகளில் 5 பெண் சிறுத்தைகள் ஆகும்.  தென் ஆப்பிரிக்காவிலிருந்து சிறுத்தைகளை அன்பளிப்பாக கோரியிருந்தது இந்தியா. இதையடுத்து தற்போது இந்த சிறுத்தைகளை தென் ஆப்பிரிக்கா நமக்கு வழங்கவுள்ளது. 

சிறுத்தைகள் வந்து சேர்ந்ததும் அவை குனோ தேசிய பூங்காவில் விடப்படும். சிறுத்தைகளை பூங்காவுக்குள் திறந்து விடும் நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர்யாதவ், முதல்வர் சிவராஜ் சிங் செளகான் ஆகியோர் கலந்து கொள்வார்கள். குனோ தேசியப் பூங்கா, சம்பல் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 

கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி, தனது 72வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, இதே குனோ தேசியப் பூங்காவில், நமீயாவிலிருந்து வருகை தந்த 8 கருஞ்சிறுத்தைகளை திறந்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.  அதில் ஐந்து பெண் ஆகும்.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து 12 சிறுத்தைகளையும் கொண்டு வருவதற்காக, இந்திய விமானப்படை விமானம் தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இந்த சிறுத்தைகள் நேராக குவாலியலிர் உள்ள விமானப்படைத் தளத்திற்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!

news

சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி

news

முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?

news

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு

news

மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

news

திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்

news

Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?

news

அலைபேசி பேச்சு

news

அது ஒரு அழகிய மழைக்காலம்

அதிகம் பார்க்கும் செய்திகள்