சென்னை: திமுக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு ஜூன் 4ம் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. தமிழ்நாட்டை பொருத்தவரை ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
திமுக சார்பில் தென்சென்னை தொகுதி வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2019 தேர்தலிலும் போட்டியிட்டு 5,64,000க்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர். இத்தொகுதியில் அதிமுக சார்பில் ஜெயவர்தன் களம் காண்கிறார். இவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகிறார்.
இந்த 3 பேர் களம் இறங்கும் தொகுதியாக தென்சென்னை இருப்பதினால், இது நட்சத்திர தொகுதியாக கருதப்படுகிறது. இவர்களின் போட்டியினால் தென் சென்னை தற்பொழுது களைகட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை. மாறாக, அனைத்துத் தொகுதிகளிலும் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
{{comments.comment}}