சென்னை: திமுக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு ஜூன் 4ம் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. தமிழ்நாட்டை பொருத்தவரை ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
திமுக சார்பில் தென்சென்னை தொகுதி வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2019 தேர்தலிலும் போட்டியிட்டு 5,64,000க்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர். இத்தொகுதியில் அதிமுக சார்பில் ஜெயவர்தன் களம் காண்கிறார். இவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகிறார்.

இந்த 3 பேர் களம் இறங்கும் தொகுதியாக தென்சென்னை இருப்பதினால், இது நட்சத்திர தொகுதியாக கருதப்படுகிறது. இவர்களின் போட்டியினால் தென் சென்னை தற்பொழுது களைகட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை. மாறாக, அனைத்துத் தொகுதிகளிலும் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}