சென்னை: கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை உள்ள காலகட்டத்தில் மழைப்பொழிவு இருக்கும். இந்த முறை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இந்த வருடம் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனை தொடர்ந்து அடுத்து கேரளாவில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இன்னும் ஐந்து நாட்களில் கேரளாவுக்கு தென் மேற்குப் பருவ மழை வந்து சேரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் கேரளாவில் மழையை வரவேற்கும் ஆயத்த நிலைக்கு மக்கள் மாறி வருகின்றனர்.
இதற்கிடையே தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்து வந்த நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
தெற்கு அரபிக்கடல் பகுதி, மாலத்தீவு, கன்னியாகுமரி பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவித்துள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}