கேரளாவில்.. அடுத்த 5 நாட்களில்.. தென்மேற்கு பருவ மழை.. தொடங்க வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு

May 27, 2024,06:16 PM IST

சென்னை:  கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


ஒவ்வொரு வருடமும் தென்மேற்கு பருவ மழை  ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை உள்ள காலகட்டத்தில் மழைப்பொழிவு இருக்கும். இந்த முறை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இந்த வருடம் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை  தொடங்கியது. இதனை தொடர்ந்து அடுத்து கேரளாவில்  தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.




இன்னும் ஐந்து நாட்களில் கேரளாவுக்கு தென் மேற்குப் பருவ மழை வந்து சேரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் கேரளாவில் மழையை வரவேற்கும் ஆயத்த நிலைக்கு மக்கள் மாறி வருகின்றனர்.


இதற்கிடையே தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்து வந்த நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் எனவும்  எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.


தெற்கு அரபிக்கடல் பகுதி, மாலத்தீவு, கன்னியாகுமரி பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்