சென்னை: கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை உள்ள காலகட்டத்தில் மழைப்பொழிவு இருக்கும். இந்த முறை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இந்த வருடம் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனை தொடர்ந்து அடுத்து கேரளாவில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இன்னும் ஐந்து நாட்களில் கேரளாவுக்கு தென் மேற்குப் பருவ மழை வந்து சேரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் கேரளாவில் மழையை வரவேற்கும் ஆயத்த நிலைக்கு மக்கள் மாறி வருகின்றனர்.
இதற்கிடையே தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்து வந்த நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
தெற்கு அரபிக்கடல் பகுதி, மாலத்தீவு, கன்னியாகுமரி பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவித்துள்ளது.
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
{{comments.comment}}