சென்னை: சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி மறுத்ததை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்றைய நிகழ்வின் போது அதிமுக எம்.எல்.ஏ., க்கள் அந்த தியாகி யார்? என பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக்கில் 1,000 கோடி ஊழல் என்ற புகார் எழுந்துள்ள நிலையில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் கேள்வி கேட்க அனுமதி கேட்டார்.

அப்போது, குறுக்கிட்ட சபாநாயகர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கை பேச அவையில் அனுமதி இல்லை என அனுமதி மறுத்தார். டாஸ்மாக் விவகாரம் குறித்து பேச எடப்பாடி பழனிசாமி முயற்சித்தார். எடப்பாடி பழனிசாமி பேசுவது அவைக்குறிப்பில் பதிவேற்ற முடியாது என சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்தார். இதனை அடுத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ., க்கள் அவையில் இருந்து வெளியேற்றினர். அவையில் இருந்துவெளியேறிய அதிமுக எம்.எல்.ஏ.,க்களை இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
ADMK loses another MLA: அதிமுக எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்
ரஜினிகாந்துடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: காரணம் இது தானா?
தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு
"குதிரை பேரத்திற்கு ஆதாரம் உள்ளதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.. தீர்ப்பு தள்ளிவைப்பு!
திமுக இப்படியே பேசிக் கொண்டிருந்தால்.. எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்காது.. காங். அமைச்சர்கள்
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!
திமுக அதிமுக.,வை இணைக்க பார்த்தது தேமுதிகவா?.. அதிர்ந்த களம்...உண்மையை உடைத்த தோழர்!
‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
NEET Exams: நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 வரை தற்காலிக தடை
{{comments.comment}}