திருப்பதி: அக்னி நட்சத்திரம் எதிரொலியாக இந்த கோடை காலத்தில் திருப்பதி வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பர். திருப்பதி ஒரு வைணவ திருத்தலமாகும். இந்தியாவில் உள்ள முக்கிய கோவில் தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் இங்கு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இங்கு வரும் பக்தர்கள் பல மணி நேரம் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோடை காலத்தில் இங்கு வரும் பக்தர்களுக்காக பல வசதிகள் செய்யப்பட்டள்ளன. இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி கூறுகையில், கோடை விடுமுறையில் திருமலை தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உணவு, மோர், குடிநீர், காலை உணவு மற்றும் மருத்துவ வசதிகள் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கோவில் வீதிகளில், பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் அனைத்திலும் வெயிலின் உஷ்ணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையில் பந்தல், கூல் பெயிண்டுகள், கார்பெட்டுகள் அமைத்துள்ளோம். அவ்வப்போது தண்ணீரை தரையில் தெளிக்கின்றோம்.
நாராயணகிரி தோட்டங்கள் மற்றும் கோவில் சுற்றுப்புறங்களில் பக்தர்கள் ஓய்வெடுக்க தற்காலிக கொட்டகைகள் அமைத்துள்ளோம். திருப்பதி ஏழுமலையான் கோவில் கோடை விடுமுறை காரணமாக சாமி தரிசனத்திற்கு வரும் சாமானி பக்தர்களுக்கு முன்னரிமை அளிக்கப்படுகிறது. இதனால் கோடைகாலம் முழுவதும் விஐபி தரிசனத்திற்கான சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}