சென்னை: வார இறுதி நாட்கள் மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசு தற்போது பண்டிகை காலங்கள் மட்டுமல்லாமல் வார இறுதி நாட்களிலும் மக்கள் சிரமமில்லாமல் பயணிக்க சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரம் வார இறுதி நாட்கள் மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறைகள் வர உள்ளது.
இந்த நிலையில் அரசு போக்குவரத்து துறை தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலான சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, வரும் 14 ,15, 16, ஆகிய தேதிகளில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக நாளை 545 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதே போல் நாளை மறுநாள் 585 பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமை 140 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
17ஆம் தேதி அதாவது பக்ரீத் பண்டிகை அன்று பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வர 705 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய www.tnstc.in மற்றும் tnstc செயலி மூலம் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.
தவெக தேர்தல் பிரச்சாரக்குழு அறிவிப்பு... 10 பேர் பட்டியல்.. 3வது இடத்தில் கே.ஏ.செங்கோட்டையன்!
விஜய்யால் தான் கரூர் சம்பவம் நடந்தது...டி.கே.எஸ். இளங்கோவன் கடும் விமர்சனம்
பாஜக பொதுக்கூட்ட பேனரில் டிடிவி தினகரன் படம் ...கூட்டணி தகவல் உண்மை தானா?
விஜய்யின் பொங்கல் வாழ்த்து: தமிழகத்தில் மீண்டும் வெடித்த தமிழ்ப் புத்தாண்டு விவாதம்
திருவள்ளுவர் தினம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய நான்கு வாக்குறுதிகள்!
திருவள்ளுவர் தினம்...அனைவரும் திருக்குறள் படிங்க...பிரதமர் மோடி வேண்டுகோள்
தஞ்சை பெரிய கோவிலில் பிரம்மாண்ட கோ-பூஜை: 108 பசுக்களுக்கு வழிபாடு!
சினிமாவை அரசியலாகப் பார்க்காதீர்கள்: தணிக்கைக் குழுவிற்கு வைரமுத்து கோரிக்கை!
சூர்யா முதல் தனுஷ் வரை...டாப் ஹீரோக்கள் படங்களின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்
{{comments.comment}}