சென்னை: வார இறுதி நாட்கள் மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசு தற்போது பண்டிகை காலங்கள் மட்டுமல்லாமல் வார இறுதி நாட்களிலும் மக்கள் சிரமமில்லாமல் பயணிக்க சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரம் வார இறுதி நாட்கள் மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறைகள் வர உள்ளது.
இந்த நிலையில் அரசு போக்குவரத்து துறை தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலான சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் 14 ,15, 16, ஆகிய தேதிகளில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக நாளை 545 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதே போல் நாளை மறுநாள் 585 பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமை 140 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
17ஆம் தேதி அதாவது பக்ரீத் பண்டிகை அன்று பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வர 705 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய www.tnstc.in மற்றும் tnstc செயலி மூலம் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}