சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்குதல், திருத்தம், செய்வதற்கான சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.
அதேபோல் 23 மற்றும் 24ஆம் தேதிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகங்களில் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பது நீக்குவது திருத்தம் செய்வது உள்ளிட்ட செயல்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி ஒருங்கிணைந்த விரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் 3.07 கோடி ஆண் வாக்காளர்கள், 3.19 கோடி பெண் வாக்காளர்கள்,8,963 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 6 கோடியே 20 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் மாநில முழுவதும் உள்ள வாக்கு சாவடி மையங்களில் காலை முதல் மாலை வரை விண்ணப்பம் வழங்கப்படுகிறது. படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து அங்கிருக்கும் அலுவலரிடம் அளிக்க வேண்டும்.
18 வயது நிரம்பியவர்கள் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். மேலும் www.voters.eci.gov.in என்ற இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது
இந்தப் பணிகளைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வங்க கடலில் மே 27ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு.. இந்திய வானிலை மையம் அறிவிப்பு..!
அமலாக்கத்துறையின் டாஸ்மாக் ரெய்டுகள்.. உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்.. இடைக்காலத் தடை
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ்.. 103 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக: எம்.பி. சு.வெங்கடேசன்
தனுஷின் புதிய படத்திற்கு என்ன பெயர் தெரியுமா..?
அரபிக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?
திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்: நயினார் நாகேந்திரன்
கிவி (KIWI) பழத்தில் குவிந்து கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்.. விலையும் ஜாஸ்தி.. பலனும் அதிகம்!
ஆர்பிஐ விதிமுறைகளை திரும்பப் பெறுக.. அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்..!
{{comments.comment}}