சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்குதல், திருத்தம், செய்வதற்கான சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.
அதேபோல் 23 மற்றும் 24ஆம் தேதிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகங்களில் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பது நீக்குவது திருத்தம் செய்வது உள்ளிட்ட செயல்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி ஒருங்கிணைந்த விரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் 3.07 கோடி ஆண் வாக்காளர்கள், 3.19 கோடி பெண் வாக்காளர்கள்,8,963 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 6 கோடியே 20 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் மாநில முழுவதும் உள்ள வாக்கு சாவடி மையங்களில் காலை முதல் மாலை வரை விண்ணப்பம் வழங்கப்படுகிறது. படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து அங்கிருக்கும் அலுவலரிடம் அளிக்க வேண்டும்.
18 வயது நிரம்பியவர்கள் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். மேலும் www.voters.eci.gov.in என்ற இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது
இந்தப் பணிகளைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}