சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்குதல், திருத்தம், செய்வதற்கான சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.
அதேபோல் 23 மற்றும் 24ஆம் தேதிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகங்களில் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பது நீக்குவது திருத்தம் செய்வது உள்ளிட்ட செயல்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி ஒருங்கிணைந்த விரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் 3.07 கோடி ஆண் வாக்காளர்கள், 3.19 கோடி பெண் வாக்காளர்கள்,8,963 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 6 கோடியே 20 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் மாநில முழுவதும் உள்ள வாக்கு சாவடி மையங்களில் காலை முதல் மாலை வரை விண்ணப்பம் வழங்கப்படுகிறது. படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து அங்கிருக்கும் அலுவலரிடம் அளிக்க வேண்டும்.
18 வயது நிரம்பியவர்கள் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். மேலும் www.voters.eci.gov.in என்ற இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது
இந்தப் பணிகளைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
{{comments.comment}}