சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்குதல், திருத்தம், செய்வதற்கான சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.
அதேபோல் 23 மற்றும் 24ஆம் தேதிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகங்களில் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பது நீக்குவது திருத்தம் செய்வது உள்ளிட்ட செயல்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி ஒருங்கிணைந்த விரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் 3.07 கோடி ஆண் வாக்காளர்கள், 3.19 கோடி பெண் வாக்காளர்கள்,8,963 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 6 கோடியே 20 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் மாநில முழுவதும் உள்ள வாக்கு சாவடி மையங்களில் காலை முதல் மாலை வரை விண்ணப்பம் வழங்கப்படுகிறது. படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து அங்கிருக்கும் அலுவலரிடம் அளிக்க வேண்டும்.
18 வயது நிரம்பியவர்கள் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். மேலும் www.voters.eci.gov.in என்ற இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது
இந்தப் பணிகளைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை உயர்வு!
தமிழக சட்டசபை தேர்தல் 2026ல் விஜய் போட்டியிட போகும் அந்த 2 தொகுதிகள்
டி20 உலகக்கோப்பை புறக்கணிப்பை கைவிட.. பாகிஸ்தான் முன்வைக்கும் 3 நிபந்தனைகள்!
அம்மா(ஆ)ச்சி
பல் வலியா ? பூச்சி பல்லா?.. எப்படிக் கண்டுபிடிக்கலாம்.. எப்படி சரி செய்யலாம்!
மகிழ்ச்சியைப் போல எந்த மருந்தும் இல்லை.. There is no medicine like happiness!
சுவையான கன்னியாகுமரி ஸ்டைல் சிக்கன் பிரியாணி!
ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.. பழமொழியும் உண்மைப் பொருளும்!
ரவா இட்லி செய்யலாமா?
{{comments.comment}}