சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக தகுதி பெறுவர். 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.
அக்டோபர் மாதம் 27ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 9ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுவதோடு வருகிற 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.

மேலும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல், ஜூலை, மற்றும் அக்டோபர் முதல் தேதியில் 18 வயது நிரம்பிய அனைவரும் புதிய வாக்காளராக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். விண்ணப்ப படிவம் 6ல் வாக்காளர் பெயர் சேர்க்கவும், படிவம் 6பி-ல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் ,படிவம் 7ல் பெயர்
நீக்கவும் ,படிவம் 8ல் திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}