சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக தகுதி பெறுவர். 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.
அக்டோபர் மாதம் 27ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 9ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுவதோடு வருகிற 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.
மேலும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல், ஜூலை, மற்றும் அக்டோபர் முதல் தேதியில் 18 வயது நிரம்பிய அனைவரும் புதிய வாக்காளராக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். விண்ணப்ப படிவம் 6ல் வாக்காளர் பெயர் சேர்க்கவும், படிவம் 6பி-ல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் ,படிவம் 7ல் பெயர்
நீக்கவும் ,படிவம் 8ல் திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}