சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் சார்பாக இன்று சிறப்பு கல்விக் கடன் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கல்விக் கடன் முகாம்கள் காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெறும். பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள் இந்த முகாம்களில் பங்கேற்கின்றனர். மாணவர்கள் தங்களுக்குத் தேவையான கல்விக் கடனை பெற இந்த முகாமை பயன்படுத்திப் பலன் பெறலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோர் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:
மாணவர்களின் பான் கார்டு, மாணவர்களின் ஆதார் அட்டை, மாணவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாணவரின் வருமானச் சான்று, மாணவர்கள் ஏற்கனவே கடன் வாங்கி இருந்தால் அது குறித்த விபரம், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பான் கார்டு, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வருமானச் சான்று, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கடன் விபரங்கள், வருமானச் சான்றிதழ் ஏதேனும் இருந்தால், சாதி சான்றிதழ், கல்வி பதிவுகளின் சான்று அதாவது 10 12 மற்றும் பட்டப் படிப்பு மதிப்பெண் பட்டியல், சேர்க்கை சான்று அதாவது கவுன்சிலிங் கடிதம் கல்லூரி அனுமதி சேர்க்கை கடிதம், நீட் நுழைவு தேர்வு முடிவு, கல்லூரி கட்டண விபரம், முதல் பட்டதாரி சான்று மற்றும் உறுதிமொழிச் சான்று, கடன் பெரும் வங்கியின் பெயர் மற்றும் பாஸ்புத்தகம், கல்லூரி ஒப்புதல் கடிதம்.
இந்த கல்விக் கடன் முகாமில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கரூர் வைஸ்யா வங்கி, எச்டிஎப்சி உள்ளிட்ட பல்வேறு முன்னணி வங்கிகள் கலந்து கொள்ள்ளவுள்ளன.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}