சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் சார்பாக இன்று சிறப்பு கல்விக் கடன் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கல்விக் கடன் முகாம்கள் காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெறும். பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள் இந்த முகாம்களில் பங்கேற்கின்றனர். மாணவர்கள் தங்களுக்குத் தேவையான கல்விக் கடனை பெற இந்த முகாமை பயன்படுத்திப் பலன் பெறலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோர் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:
மாணவர்களின் பான் கார்டு, மாணவர்களின் ஆதார் அட்டை, மாணவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாணவரின் வருமானச் சான்று, மாணவர்கள் ஏற்கனவே கடன் வாங்கி இருந்தால் அது குறித்த விபரம், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பான் கார்டு, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வருமானச் சான்று, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கடன் விபரங்கள், வருமானச் சான்றிதழ் ஏதேனும் இருந்தால், சாதி சான்றிதழ், கல்வி பதிவுகளின் சான்று அதாவது 10 12 மற்றும் பட்டப் படிப்பு மதிப்பெண் பட்டியல், சேர்க்கை சான்று அதாவது கவுன்சிலிங் கடிதம் கல்லூரி அனுமதி சேர்க்கை கடிதம், நீட் நுழைவு தேர்வு முடிவு, கல்லூரி கட்டண விபரம், முதல் பட்டதாரி சான்று மற்றும் உறுதிமொழிச் சான்று, கடன் பெரும் வங்கியின் பெயர் மற்றும் பாஸ்புத்தகம், கல்லூரி ஒப்புதல் கடிதம்.
இந்த கல்விக் கடன் முகாமில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கரூர் வைஸ்யா வங்கி, எச்டிஎப்சி உள்ளிட்ட பல்வேறு முன்னணி வங்கிகள் கலந்து கொள்ள்ளவுள்ளன.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}