சென்னை: பொங்கலை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பொங்கலை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதினால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதினால், பஸ் மற்றும் ரயில் போக்குவரத்தில் கூட்டம் அதிகம் இருக்கும். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தெற்கு ரயில்வே ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை டூ தூத்துக்குடி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும், தாம்பரம் டூ நெல்லை இடையே முன்பதிவுடன் கூடிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு:
திருநெல்வேலிக்கு முன்பதிவு ரயில்
தாம்பரத்திலிருந்து ஜனவரி 11, 13 மற்றும் ஜனவரி 16ம் தேதிகளில் நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். தாம்பரத்தில் இரவு 9.50க்கு புறப்படும் ரயில் விருத்தாச்சலம், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் (ஜனவரி 12, 14, 17ம் தேதிகள்) பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் ரயில் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை வந்தடையும். தாம்பரத்திலிருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரயிலில் பயணிக்க பயணிகள் இன்றிலிருந்து முன் பதிவு செய்யலாம்.
தூத்துக்குடிக்கு முன்பதிவில்லாத ரயில்
சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு முன் பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னை தாம்பரத்திலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14 மற்றும் ஜனவரி 16ல்) சிறப்பு ரயில் தூத்துக்குடி செல்லும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு முன்பதிவில்லாத ரயில் இயக்கப்படுகிறது.
தாம்பரத்திலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் கடலூர் மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி வழியாக இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். மறு மார்க்கத்தில் ஜனவரி 15 , 17ம் தேதி ஆகிய தேதிகளில் தூத்துக்குடியிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.30க்கு தாம்பரம் வந்தடையும்.
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
{{comments.comment}}