மக்களே மகிழ்ச்சி செய்தி.. பொங்கலுக்காக.. தாம்பரத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு ஸ்பெஷல் ரயில்

Jan 10, 2024,06:43 PM IST

சென்னை: பொங்கலை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


பொங்கலை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதினால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதினால், பஸ் மற்றும் ரயில் போக்குவரத்தில் கூட்டம் அதிகம் இருக்கும். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தெற்கு ரயில்வே ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.


பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை டூ தூத்துக்குடி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும், தாம்பரம் டூ நெல்லை இடையே முன்பதிவுடன் கூடிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும்  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு:




திருநெல்வேலிக்கு முன்பதிவு ரயில்


தாம்பரத்திலிருந்து ஜனவரி 11, 13 மற்றும் ஜனவரி 16ம் தேதிகளில்  நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். தாம்பரத்தில் இரவு 9.50க்கு புறப்படும் ரயில் விருத்தாச்சலம், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் (ஜனவரி 12, 14, 17ம் தேதிகள்) பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் ரயில் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை வந்தடையும். தாம்பரத்திலிருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரயிலில் பயணிக்க பயணிகள் இன்றிலிருந்து முன் பதிவு செய்யலாம்.


தூத்துக்குடிக்கு முன்பதிவில்லாத ரயில்


சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு முன் பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னை தாம்பரத்திலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14 மற்றும் ஜனவரி 16ல்) சிறப்பு ரயில் தூத்துக்குடி செல்லும். கடலூர்,  மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு முன்பதிவில்லாத ரயில் இயக்கப்படுகிறது. 


தாம்பரத்திலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் கடலூர் மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி வழியாக இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். மறு மார்க்கத்தில் ஜனவரி 15 , 17ம் தேதி ஆகிய தேதிகளில் தூத்துக்குடியிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.30க்கு தாம்பரம் வந்தடையும்.

சமீபத்திய செய்திகள்

news

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

news

டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு

news

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்

news

திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

news

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

news

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்

news

70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?

news

நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்