ஜூன் 21, 22 சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

Jun 17, 2025,04:02 PM IST

சென்னை: வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


ரயில் நிலையங்களில் வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பது என்பது சமீபகாலமாகவே அதிகரித்துள்ளது. வேலை,படிப்பு போன்ற காரணங்களுக்காக வெளியூர்களில் தங்கியிருப்பவர்கள் வார இறுதி விடுமுறையை தன் சொந்த ஊர்களில் செலவிடுவதற்காக சமீபகாலமாகவே ரயில் மட்டுமின்றி, பேருந்துகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த கூட்டத்தை சமாளிக்க சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜூன் 21,22 ஆகிய இரு நாட்களிலும் கூட்டத்தை சமாளிக்க தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


ஜூன் 21ம் தேதி (சனிக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.55க்கு புறப்படும் ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம்,அரியலூர், திருச்சிராபள்ளி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை,விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலிக்கு அடுத்த நாள் காலை 8.45க்கு சென்றடைகிறது.




இதே ரயில் ஜூன் 22ம் தேதி (ஞாயிறு) மறுமார்க்கமாக இரவு 9.40க்கு புறப்பட்டு, நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம்,  செங்கல்பட்டு, தாம்பரம்  அடுத்த நாள் காலை 8.15க்கு எழும்பூர் வந்தடைகிறது.


இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை (ஜூன்.18) தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அம்பானி வீட்டு மின்சார கட்டணம் எவ்வளவு தெரியுமா? கேட்ட நீங்களே ஆசந்து போவீங்க!

news

யாருடன் கூட்டணி?...டிடிவி தினகரன் நாளை கட்சியினருடன் ஆலோசனை

news

யூடியூப் பார்த்து வெண்காரம் வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு

news

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை புறக்கணித்த 30 உறுப்பினர்கள்

news

பாஜகவின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்பு

news

பல ஆயிரம் கோடி லஞ்சம்... இது தான் திமுக அமைச்சர் கே.என். நேருவின் சாதனைகள்: அண்ணாமலை

news

கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை...சபாநாயகர் அப்பாவு விளக்கம்

news

கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடிப்பு - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

news

நெற்றிக்கண் திறப்பினும்....!

அதிகம் பார்க்கும் செய்திகள்