- அ.சீ. லாவண்யா
கொழும்பு: டிட்வா புயல் எதிரொலியாக, இலங்கையில், கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் புயல் தாக்கம் காரணமாக பல மாகாணங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. நாட்டின் மத்திய, மேற்கு மற்றும் தென் பகுதிகளில் ஆறுகள் கரையெழுந்ததால் கிராமங்கள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளன.
அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 130-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவு காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் வீடுகள் பல மணி நேரமாக மண்ணின் கீழ் புதைந்துள்ளன. சில பகுதிகளில் ரோடுகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் உதவிக் குழுக்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அணுகவே முடியாமல் தவிக்கின்றன.
கொழும்பு, கண்டி, ரத்தினபுரம், கேகாலை மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்டவை இணைந்து ஹெலிகாப்டர்கள், படகுகள், சிறப்பு மீட்பு குழுக்களுடன் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஆபத்தான மலைப்பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர்.
பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சேர்ந்த 44,000 பேர் அவசர தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 15,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அரசு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. மக்கள் உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளைப் பெற முடியாமல் பரிதவிக்கும் நிலையும் உள்ளது.
சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி இலங்கைக்கு கை கொடுத்து வருகின்றன. இந்தியா, ஐநா மனிதாபிமான அமைப்புகள், சிவப்பு சிலுவை அமைப்புகள் உட்பட பல அமைப்புகள் உணவு, மருந்து, மீட்பு கருவிகள் போன்றவற்றை அனுப்பத் தொடங்கியுள்ளன. இந்தியாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தனி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் தற்போது அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்கள் கனமழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் வெள்ளநீர் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதாளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!
தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து
திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!
சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!
திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்
{{comments.comment}}