- அ.சீ. லாவண்யா
கொழும்பு: டிட்வா புயல் எதிரொலியாக, இலங்கையில், கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் புயல் தாக்கம் காரணமாக பல மாகாணங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. நாட்டின் மத்திய, மேற்கு மற்றும் தென் பகுதிகளில் ஆறுகள் கரையெழுந்ததால் கிராமங்கள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளன.
அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 130-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவு காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் வீடுகள் பல மணி நேரமாக மண்ணின் கீழ் புதைந்துள்ளன. சில பகுதிகளில் ரோடுகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் உதவிக் குழுக்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அணுகவே முடியாமல் தவிக்கின்றன.
கொழும்பு, கண்டி, ரத்தினபுரம், கேகாலை மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்டவை இணைந்து ஹெலிகாப்டர்கள், படகுகள், சிறப்பு மீட்பு குழுக்களுடன் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஆபத்தான மலைப்பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர்.
பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சேர்ந்த 44,000 பேர் அவசர தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 15,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அரசு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. மக்கள் உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளைப் பெற முடியாமல் பரிதவிக்கும் நிலையும் உள்ளது.
சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி இலங்கைக்கு கை கொடுத்து வருகின்றன. இந்தியா, ஐநா மனிதாபிமான அமைப்புகள், சிவப்பு சிலுவை அமைப்புகள் உட்பட பல அமைப்புகள் உணவு, மருந்து, மீட்பு கருவிகள் போன்றவற்றை அனுப்பத் தொடங்கியுள்ளன. இந்தியாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தனி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் தற்போது அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்கள் கனமழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் வெள்ளநீர் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதாளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}