இலங்கையைப் புரட்டிப் போட்ட டிட்வா புயல்.. பேரிழப்பு.. அவசர நிலை பிரகடனம்

Nov 29, 2025,05:31 PM IST

- அ.சீ. லாவண்யா


கொழும்பு:  டிட்வா புயல் எதிரொலியாக, இலங்கையில், கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் புயல் தாக்கம் காரணமாக பல மாகாணங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. நாட்டின் மத்திய, மேற்கு மற்றும் தென் பகுதிகளில் ஆறுகள் கரையெழுந்ததால் கிராமங்கள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளன.


அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 130-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவு காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் வீடுகள் பல மணி நேரமாக மண்ணின் கீழ் புதைந்துள்ளன. சில பகுதிகளில் ரோடுகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் உதவிக் குழுக்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அணுகவே முடியாமல் தவிக்கின்றன.


கொழும்பு, கண்டி, ரத்தினபுரம், கேகாலை மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில், இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்டவை இணைந்து ஹெலிகாப்டர்கள், படகுகள், சிறப்பு மீட்பு குழுக்களுடன் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஆபத்தான மலைப்பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர்.


பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சேர்ந்த 44,000 பேர் அவசர தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 15,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அரசு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. மக்கள் உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளைப் பெற முடியாமல் பரிதவிக்கும் நிலையும் உள்ளது.


சர்வதேச அளவில் பல நாடுகள் உதவி இலங்கைக்கு கை கொடுத்து வருகின்றன. இந்தியா, ஐநா மனிதாபிமான அமைப்புகள், சிவப்பு சிலுவை அமைப்புகள் உட்பட பல அமைப்புகள் உணவு, மருந்து, மீட்பு கருவிகள் போன்றவற்றை அனுப்பத் தொடங்கியுள்ளன. இந்தியாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தனி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் தற்போது அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


இன்னும் சில நாட்கள் கனமழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் வெள்ளநீர் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதாளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

We The Leaders: புதிய அரசியல் இயக்கம்.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு!

news

தமிழகத்தில் தீவிரம் அடையும் தென்மேற்கு பருவமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’

news

Annamalai Politics: அண்ணாமலையின் அரசியல் எப்படி இருக்கும்?

news

பாஜகவிலிருந்து விலகினார்.. அண்ணாமலையின் புதிய சகாப்தம் இன்று தொடங்குகிறது!

news

இலங்கையில் பரிதாபம்.. முதியோர் இல்லத்தில் கோர தீ விபத்து.. 12 பேர் உயிரிழப்பு

news

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்போம்!

news

சிந்தனைச் சிதறல்.. உறவினும் மேலான ஒரு இதயம் தேவை!

news

உலக சுற்றுச்சூழல் தினம்.. கொண்டாடுவோம் இயற்கையை.. பாதுகாப்போம் பூமியை!

news

ஆசையே அலை போலே!

அதிகம் பார்க்கும் செய்திகள்