இலங்கை நாடாளுமன்றம் அதிரடி கலைப்பு.. நவம்பர் 14ம் தேதி தேர்தல்.. புதிய ஜனாதிபதி அனுரா உத்தரவு

Sep 25, 2024,10:05 AM IST

கொழும்பு:   இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து, நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடத்த புதிய ஜனாதிபதி அனுரா குமார திசநாயகே உத்தரவிட்டுள்ளார்.


இலங்கையில் புதிய ஜனாதிபதியாக அனுரா பதவியேற்றுள்ளார். இடதுசாரி தலைவரான அனுரா பதவியேற்றதும் தற்போது நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் அனுராவின் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சிக்கு 3 உறுப்பினர்களே உள்ளனர். இருப்பினும் ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வெற்றியைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்திலும் தனது கட்சியை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க வைக்க அனுரா திட்டமிட்டுள்ளார்.




நேற்று தற்காலிக பிரதமராக ஹரினி அமரசூரியாவை நியமித்த அனுரா தற்போது நாடாளுமன்றத்தையும் கலைத்து தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளார். தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் தான் நினைத்ததை சாதிக்க முடியும் என்று அனுரா கருதுகிறார். பொருளாதார சீர்திருத்தங்களே அவரது முதல் முன்னுரிமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இடதுசாரி தலைவராக இருப்பதால் அவரது முதல் சாய்ஸ் சீனாவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் உதவியைப் பெரிய அளவில் பெற்று நாட்டை ஸ்திரப்படுத்த அவர் முயலக் கூடும். அதேசமயம், இந்தியாவைப் பகைத்துக் கொள்ள விரும்பாமல் இந்தியாவுடனும் நல்லுறவை பேண அவர் முயல்வாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


ரணில் விக்கிரமசிங்கே இருந்தபோது இந்தியா மிகப் பெரிய அளவில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்க கடன் உதவிகளை வழங்கியுள்ளது என்பது நினைவிருக்கலாம். ஆனால் அனுராவின் அப்ரோச் எந்த அளவுக்கு இருக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும். ஒரு வேளை அனுரா இந்தியாவுக்கு எதிர் திசையில் போக முயற்சித்தால், தமிழ்நாட்டு மீனவர்கள் விவகாரத்தை மிகப் பெரிய அளவில் மத்திய அரசு கையில் எடுத்து இலங்கைக்கு குடைச்சல் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கச்சத்தீவையும் கைப்பற்றும் முயற்சியில் மத்திய அரசு இறங்கலாம்.


கடைசியாக 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற்றது. அதன் ஆயுள் காலம் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் வரை உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆடி அசைந்து வரும் டித்வா புயல்.. சென்னையில் எப்போது மழை தொடங்கும்.. யாருக்கு ரெட்?

news

டிட்வா புயலால் நமக்கு மழை எப்படி இருக்கும்.. கலைஞர் ஸ்டைலில் பதில் சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்!

news

ஜனவரி + தேர்தல் வரப் போகுது.. பொங்கல் பரிசு என்ன கிடைக்கும்.?.. எதிர்பார்ப்பில் மக்கள்!

news

ஓசூர் விமான நிலையம்.. TIDCOவின் புதிய டெண்டர்.. தமிழக - கர்நாடக எல்லையில் ஒரு கேம் சேஞ்சர்!

news

இம்ரான் கான் உயிரோடு இருப்பதற்கு என்ன ஆதாரம்?.. கேட்கிறார் மகன் காசிம் கான்

news

மூச்சு உள்ள வரை... அன்றும், இன்றும் என்றும் அதிமுக தான்...ஜெயக்குமார் உறுதி!

news

கருணாநிதிக்கு நெருக்கமானவர்.. கெளரவ டாக்டர் பட்டம் பெற்ற சிவக்குமாருக்கு.. முதல்வர் புகழாரம்

news

அரசுப் பள்ளிகளில் 'காக்கா முட்டை' கட்டாயம்.. அரசு உத்தரவு.. மாணவர்கள் ஹேப்பி!

news

ரூ. 95,000த்திற்கு உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.560 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்