1500 கிலோமீட்டர்.. இலங்கையின் கடலோரத்தை நடந்தே கடந்து சாதனை படைத்த.. இளைஞர் ஷஹமி ஷாஹீத்!

Aug 30, 2024,06:26 PM IST

கொழும்பு: இலங்கையின் கடலோரப் பகுதியை நடந்தே கடந்து உலக சாதனை படைத்துள்ளார் 25 வயதேயான இளைஞர் ஷஹமி ஷாஹீத். இவர் நடந்து கடந்து தூரம் எவ்வளவு தெரியுமா.. ஜஸ்ட் 1500 கிலோமீட்டர் தான்!


இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள கலுத்தரா மாவட்டத்தில் உள்ள பேருவளை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஷஹமி ஷாஹீத்.  25 வயதான ஷாஹீத்துக்கு தனது நாட்டின் கடலோரத்தை நடந்தே கடந்து சாதனை படைக்க ஆவல் ஏற்பட்டது. இதையடுத்து தனது சாதனைப் பயணத்தை தொடங்கினார். 45 நாட்களில் தனது பயணத்தை முடிக்க அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே இதை முடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.




பேருவளையில் தொடங்கிய இவரது பயணம் அம்பலன்கோடா, ரன்னா, மிரிஸல்ஸா, ஹம்பந்தோட்டா, வெல்லவயா, மொனரகலா, சியம்பலந்துவா, பொட்டுவில், நிலவேலி, முல்லைத்தீவு, பரந்தன், யானை இறவு, சுன்னாகம், மன்னார், மேடச்சியா, அனுராதபுரா, புத்தளம், மரவிளா என்று கடந்து கொழும்பு வழியாக பேருவளையில் முடிவடைந்தது.


இலங்கையின் அமைதி மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி இந்த சாதனைப் பயணத்தை மேற்கொண்டிருந்தார் ஷாஹீத். இவரது இந்த நடை பயணத்திற்கு இலங்கையில் பெரும் வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. குறிப்பாக இளைஞர் சமுதாயதம் இவருக்கு ஆதரவாக போகும் இடமெல்லாம் திரண்டு வந்து ஆதரவு அளித்தது. 


தனது பயணம் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் போட்டபடியே பயணத்தை மேற்கொண்டிருந்தார் ஷாஹீத்.  இலங்கை மக்களே கூட அறியாத பல்வேறு இடங்கள் குறித்து அவர் தனது வீடியோக்களில்  கூறியதால் இலங்கை மக்களுக்கே இவரது பயணம் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது. அந்த இடங்களுக்கெல்லாம் போக வேண்டும் என்ற ஆர்வமும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகின. ஷாஹீத்தின் பயணம் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 




சாதனை படைத்த ஷாஹீத், தனது பயணத்தின் நிறைவாக அதிபர் ரனில் விக்கிரமசிங்கேவை சந்தித்தார். அவரை அதிபர் விக்கிரமசிங்கே வெகுவாக பாராட்டினார்.  மேலும் சிறப்புப் பரிசையும் வழங்கி கெளரவித்தார். தொடர்ந்து இதுபோல ஆக்கப்பூர்வமான விஷயங்களைச் செய்யுமாறும் அவர் ஊக்கம் அளித்தார்.


இளைஞர் ஷஹமி ஷாஹீத்தின் இந்த நடை பயணம் இலங்கை மக்களிடையே மிகப் பெரிய பேசுபொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டை நோக்கி நகரும் புயல்.. மழை அதிகரிக்கும்.. நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!

news

நவம்பர் 30ம் தேதி காலை டித்வா புயல் கரையை கடக்கும்...சென்னை வானிலை மையம்

news

தவெக.,வில் இணைந்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்!

news

கே.ஏ.செங்கோட்டையனைத் தொடர்ந்து.. தவெகவுக்குப் படையெடுக்க போகும் அரசியல் தலைகள்!

news

2026ல் மக்கள் புரட்சி ஏற்பட்டு விஜய் வெற்றி பெறுவார்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

news

விஜய்யுடன் கை கோர்த்த செங்கோட்டையன்.. அதிமுகவுக்கு குட்பை சொன்ன தவெக!

news

செங்கோட்டையன் பற்றி பதிலளிக்க ஒன்றுமில்லை...எடப்பாடி பழனிச்சாமி பதில்

news

உருவானது டித்வா புயல்...வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

news

108 ஆம்புலன்ஸ் அவசர எண் மாற்றம் - புதிய எண்கள் அறிவிப்பு.. மக்களே நோட் பண்ணிக்குங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்