சென்னை: நீண்ட நாட்களுக்குப் பிறகு நாயகியாக கமிட்டாகியுளள்ள நடிகை ஸ்ரீதிவ்யா, மெய்யழகன் படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் ஸ்ரீ திவ்யாவின் லதா பாண்டி என்ற கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவருடைய நடிப்பு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தமிழில் நடித்த முதல் படமே இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
இதன் பின்னர் இசையமைப்பாளர் ஜி. வி பிரகாசுக்கு ஜோடியாக பென்சில் படத்தில் நடித்தார். பின்னர் இவருக்கு பட வாய்ப்பு தொடர்ந்து வரவே ஈட்டி, காக்கி சட்டை, வெள்ளக்காரத்துரை, மருது உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இப்படங்கள் மூலம் ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைளில் ஒருவராக திகழ்ந்தார். இதனிடையே ஸ்ரீ திவ்யா சினிமாவில் சில காலமாக தலை காட்டாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மெய்யழகன் என்ற படத்தில் கமிட்டாகி உள்ளார். இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார்.இது கார்த்தியின் 27-வது படமாகும். இவர்களுடன் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் நாயகியாக கம்பேக் கொடுத்த ஸ்ரீதிவ்யா மெய்யழகன் படத்தின் டப்பிங்கில் விறுவிறுப்பாக பணியாற்றி வருகிறார். தற்போது இவர் டப்பிங் பேசுவது போன்ற புகைப்படம் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}