- மஞ்சுளா தேவி
ஸ்ரீவைகுண்டம்: நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையப் பகுதியில் 800 பயணிகளுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. தற்போது அதிலிருந்து 300 பேரை மீட்டு விட்டனர். ரயிலில் தவித்துக் கொண்டிருக்கும் 500 பேரை மீட்க தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன.
நெல்லையிலிருந்து கிளம்பிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பெரும் மழை மற்றும் வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையப் பகுதியில் சிக்கிக் கொண்டது. ரயிலில் பயணிகளுடன் ரயில் பாதி வழியில் நின்று விட்டது. இறங்கி வெளியிலும் போக முடியாத அளவுக்கு வெள்ளக்காடாக இருந்ததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
அவர்களை மீட்க ரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சாப்பாடு கூட கிடைக்காமல் பயணிகள் தவிக்கும் நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில், 300 பயணிகள் மீட்டு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 500 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது ரயில் தண்டவாளங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால் ரயிலை இயக்க முடியவில்லை. மேலும் ரயிலுக்கு வெளியே 10 அடிக்கு மேலாக நாலாபுறமும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. 21 மணி நேரமாக சரியான உணவு, தண்ணீர் இல்லாமல் பயணிகள் தவிர்த்து வருகின்றனர். இவர்களுக்கு விமானப்படை மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}