ஸ்ரீவைகுண்டம் அருகே செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தத்தளிக்கும் 500 பணிகள்.. மீட்புப் பயணிகள் தீவிரம்

Dec 18, 2023,06:26 PM IST

- மஞ்சுளா தேவி


ஸ்ரீவைகுண்டம்: நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையப் பகுதியில் 800 பயணிகளுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. தற்போது அதிலிருந்து 300 பேரை மீட்டு விட்டனர். ரயிலில் தவித்துக் கொண்டிருக்கும் 500 பேரை மீட்க தீவிர  முயற்சிகள் நடந்து வருகின்றன.


நெல்லையிலிருந்து கிளம்பிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பெரும் மழை மற்றும் வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையப் பகுதியில் சிக்கிக் கொண்டது. ரயிலில் பயணிகளுடன் ரயில் பாதி வழியில் நின்று விட்டது. இறங்கி வெளியிலும் போக முடியாத அளவுக்கு வெள்ளக்காடாக இருந்ததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.




அவர்களை மீட்க ரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சாப்பாடு கூட கிடைக்காமல் பயணிகள் தவிக்கும் நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில், 300 பயணிகள் மீட்டு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 500 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தற்போது ரயில் தண்டவாளங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால் ரயிலை இயக்க முடியவில்லை. மேலும் ரயிலுக்கு வெளியே 10  அடிக்கு மேலாக நாலாபுறமும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. 21 மணி நேரமாக சரியான உணவு, தண்ணீர் இல்லாமல் பயணிகள் தவிர்த்து வருகின்றனர். இவர்களுக்கு விமானப்படை மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்