- மஞ்சுளா தேவி
ஸ்ரீவைகுண்டம்: நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையப் பகுதியில் 800 பயணிகளுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. தற்போது அதிலிருந்து 300 பேரை மீட்டு விட்டனர். ரயிலில் தவித்துக் கொண்டிருக்கும் 500 பேரை மீட்க தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன.
நெல்லையிலிருந்து கிளம்பிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பெரும் மழை மற்றும் வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையப் பகுதியில் சிக்கிக் கொண்டது. ரயிலில் பயணிகளுடன் ரயில் பாதி வழியில் நின்று விட்டது. இறங்கி வெளியிலும் போக முடியாத அளவுக்கு வெள்ளக்காடாக இருந்ததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

அவர்களை மீட்க ரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சாப்பாடு கூட கிடைக்காமல் பயணிகள் தவிக்கும் நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில், 300 பயணிகள் மீட்டு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 500 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது ரயில் தண்டவாளங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால் ரயிலை இயக்க முடியவில்லை. மேலும் ரயிலுக்கு வெளியே 10 அடிக்கு மேலாக நாலாபுறமும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. 21 மணி நேரமாக சரியான உணவு, தண்ணீர் இல்லாமல் பயணிகள் தவிர்த்து வருகின்றனர். இவர்களுக்கு விமானப்படை மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!
{{comments.comment}}