- மஞ்சுளா தேவி
ஸ்ரீவைகுண்டம்: நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையப் பகுதியில் 800 பயணிகளுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. தற்போது அதிலிருந்து 300 பேரை மீட்டு விட்டனர். ரயிலில் தவித்துக் கொண்டிருக்கும் 500 பேரை மீட்க தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன.
நெல்லையிலிருந்து கிளம்பிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பெரும் மழை மற்றும் வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையப் பகுதியில் சிக்கிக் கொண்டது. ரயிலில் பயணிகளுடன் ரயில் பாதி வழியில் நின்று விட்டது. இறங்கி வெளியிலும் போக முடியாத அளவுக்கு வெள்ளக்காடாக இருந்ததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

அவர்களை மீட்க ரயில்வே துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. சாப்பாடு கூட கிடைக்காமல் பயணிகள் தவிக்கும் நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில், 300 பயணிகள் மீட்டு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 500 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது ரயில் தண்டவாளங்களில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால் ரயிலை இயக்க முடியவில்லை. மேலும் ரயிலுக்கு வெளியே 10 அடிக்கு மேலாக நாலாபுறமும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. 21 மணி நேரமாக சரியான உணவு, தண்ணீர் இல்லாமல் பயணிகள் தவிர்த்து வருகின்றனர். இவர்களுக்கு விமானப்படை மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}