சென்னை: 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும் மாணவ, மாணவியருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. இன்று முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வை கிட்டத்தட்ட 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்களும் 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகளும் என மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் எழுதுகிறார்கள். இதில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர் ஒருவர்.

இந்த தேர்வுக்காக மொத்தம் 4017 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தனித் தேர்வர்களாக கிட்டத்தட்ட 29 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். 2535 கைதிகளும் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். தேர்வுகள் சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அனைத்து தேர்வு மையங்களிலும் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களைக் கண்காணிக்கவும் முறைகேடுகளைத் தடுக்கவும், பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வில் ஒழுங்கீனத்தில் ஈடுபடும் மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வகுப்பறைகளில் குடிநீர், போதுமான காற்றோட்ட வசதி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}