சென்னை: 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும் மாணவ, மாணவியருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. இன்று முதல் ஏப்ரல் எட்டாம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வை கிட்டத்தட்ட 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்களும் 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகளும் என மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் எழுதுகிறார்கள். இதில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர் ஒருவர்.

இந்த தேர்வுக்காக மொத்தம் 4017 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தனித் தேர்வர்களாக கிட்டத்தட்ட 29 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். 2535 கைதிகளும் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். தேர்வுகள் சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அனைத்து தேர்வு மையங்களிலும் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களைக் கண்காணிக்கவும் முறைகேடுகளைத் தடுக்கவும், பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வில் ஒழுங்கீனத்தில் ஈடுபடும் மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வகுப்பறைகளில் குடிநீர், போதுமான காற்றோட்ட வசதி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}