சென்னை: சென்னை மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன் 10ம் வகுப்பு ரிசல்ட் பாக்க சென்ற போது லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இந்நிலையில், சென்னை மதுரவாயல் பள்ளியில் படிக்கும் மாணவன் ஜீவா 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். ரிசல்ட்டையொட்டி தான் படித்து வரும் பள்ளிக்கு ரிசல்ட் பார்க்க ஆர்வமாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது மதுவாயல் பாலத்தின் கீழே சென்ற போது, எதிரே வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது.
இதில் ஜீவா விபத்து நடந்த இடத்திலேயே பலியானார். லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் சாலையிலேயே லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவானார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான லாரி டிரைவரையும் தேடி வருகின்றனர். தேர்வு முடிவுகள் வெளியான சில மணி நேரத்தில் ரிசல்ட் பார்க்காமலேயே மாணவன் ஜீவா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}