சென்னை: சென்னை மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன் 10ம் வகுப்பு ரிசல்ட் பாக்க சென்ற போது லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இந்நிலையில், சென்னை மதுரவாயல் பள்ளியில் படிக்கும் மாணவன் ஜீவா 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். ரிசல்ட்டையொட்டி தான் படித்து வரும் பள்ளிக்கு ரிசல்ட் பார்க்க ஆர்வமாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது மதுவாயல் பாலத்தின் கீழே சென்ற போது, எதிரே வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது.

இதில் ஜீவா விபத்து நடந்த இடத்திலேயே பலியானார். லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் சாலையிலேயே லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவானார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான லாரி டிரைவரையும் தேடி வருகின்றனர். தேர்வு முடிவுகள் வெளியான சில மணி நேரத்தில் ரிசல்ட் பார்க்காமலேயே மாணவன் ஜீவா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
{{comments.comment}}