10 வகுப்பு மாணவன்.. ரிசல்ட் பார்க்க சென்ற போது.. விபத்தில் சிக்கி பரிதாப மரணம்!

May 10, 2024,01:36 PM IST

சென்னை: சென்னை மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன் 10ம் வகுப்பு ரிசல்ட் பாக்க சென்ற போது லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.


10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின.  இந்நிலையில், சென்னை மதுரவாயல் பள்ளியில் படிக்கும் மாணவன் ஜீவா 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். ரிசல்ட்டையொட்டி தான் படித்து வரும் பள்ளிக்கு ரிசல்ட் பார்க்க ஆர்வமாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது மதுவாயல் பாலத்தின் கீழே சென்ற போது, எதிரே வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. 




இதில் ஜீவா விபத்து நடந்த இடத்திலேயே பலியானார். லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் சாலையிலேயே லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவானார்.


இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான லாரி டிரைவரையும் தேடி வருகின்றனர். தேர்வு முடிவுகள் வெளியான சில மணி நேரத்தில் ரிசல்ட் பார்க்காமலேயே மாணவன் ஜீவா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்