சென்னை: சென்னை மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன் 10ம் வகுப்பு ரிசல்ட் பாக்க சென்ற போது லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இந்நிலையில், சென்னை மதுரவாயல் பள்ளியில் படிக்கும் மாணவன் ஜீவா 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். ரிசல்ட்டையொட்டி தான் படித்து வரும் பள்ளிக்கு ரிசல்ட் பார்க்க ஆர்வமாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது மதுவாயல் பாலத்தின் கீழே சென்ற போது, எதிரே வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது.

இதில் ஜீவா விபத்து நடந்த இடத்திலேயே பலியானார். லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் சாலையிலேயே லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவானார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான லாரி டிரைவரையும் தேடி வருகின்றனர். தேர்வு முடிவுகள் வெளியான சில மணி நேரத்தில் ரிசல்ட் பார்க்காமலேயே மாணவன் ஜீவா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}