ஸ்ரீஹரிகோட்டா: இ.ஓ. எஸ் 08 என்ற செயற்கைக்கோளை எஸ்.எஸ்.எல்.வி டி- 3 என்ற ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 16ம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ. இதற்கான கவுண்ட்டவுன் நாளை தொடங்குகிறது.
புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இ.ஒ.எஸ்.-08 எனும் செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் எடை 175.5 கிலோ ஆகும். இதில் எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்ப்ராரெட் பேலோட், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் - ரெப்லெக்டோமெட்ரி பேலோட், சிக் யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வுக் கருவிகள் உள்ளன. இதன் பணிக்காலம் ஓராண்டாகும்.

இந்த நிலையில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து இ.ஓ.எஸ் 08 என்ற செயற்கைக்கோளை, எஸ்.எஸ்.எல்.வி- டி3 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதன் கவுண்டவுன் நாளை தொடங்குகிறது. இந்த செயற்கைகோள் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 9:17 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
இந்த செயற்கைக்கோள் பூமியை 24 மணி நேரமும் கண்காணித்து புகைப்படம் எடுக்கும். மேலும் இது பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ கண்டறிதல் போன்றவைக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் விண்ணில் செலுத்த தயாராக உள்ள இ.ஓ.எஸ் 08 என்ற செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து தற்போது ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணியை செய்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மனசைத் தொட்ட அந்த 5 ரூபாய் பரிசு!
ஆசிரியர்!
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
{{comments.comment}}