ஸ்ரீஹரிகோட்டா: இ.ஓ. எஸ் 08 என்ற செயற்கைக்கோளை எஸ்.எஸ்.எல்.வி டி- 3 என்ற ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 16ம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ. இதற்கான கவுண்ட்டவுன் நாளை தொடங்குகிறது.
புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இ.ஒ.எஸ்.-08 எனும் செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் எடை 175.5 கிலோ ஆகும். இதில் எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்ப்ராரெட் பேலோட், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் - ரெப்லெக்டோமெட்ரி பேலோட், சிக் யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வுக் கருவிகள் உள்ளன. இதன் பணிக்காலம் ஓராண்டாகும்.

இந்த நிலையில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து இ.ஓ.எஸ் 08 என்ற செயற்கைக்கோளை, எஸ்.எஸ்.எல்.வி- டி3 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதன் கவுண்டவுன் நாளை தொடங்குகிறது. இந்த செயற்கைகோள் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 9:17 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
இந்த செயற்கைக்கோள் பூமியை 24 மணி நேரமும் கண்காணித்து புகைப்படம் எடுக்கும். மேலும் இது பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ கண்டறிதல் போன்றவைக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் விண்ணில் செலுத்த தயாராக உள்ள இ.ஓ.எஸ் 08 என்ற செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து தற்போது ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணியை செய்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}