ஸ்ரீஹரிகோட்டா: இ.ஓ. எஸ் 08 என்ற செயற்கைக்கோளை எஸ்.எஸ்.எல்.வி டி- 3 என்ற ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 16ம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ. இதற்கான கவுண்ட்டவுன் நாளை தொடங்குகிறது.
புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இ.ஒ.எஸ்.-08 எனும் செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் எடை 175.5 கிலோ ஆகும். இதில் எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்ப்ராரெட் பேலோட், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் - ரெப்லெக்டோமெட்ரி பேலோட், சிக் யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வுக் கருவிகள் உள்ளன. இதன் பணிக்காலம் ஓராண்டாகும்.
இந்த நிலையில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து இ.ஓ.எஸ் 08 என்ற செயற்கைக்கோளை, எஸ்.எஸ்.எல்.வி- டி3 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதன் கவுண்டவுன் நாளை தொடங்குகிறது. இந்த செயற்கைகோள் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 9:17 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
இந்த செயற்கைக்கோள் பூமியை 24 மணி நேரமும் கண்காணித்து புகைப்படம் எடுக்கும். மேலும் இது பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ கண்டறிதல் போன்றவைக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் விண்ணில் செலுத்த தயாராக உள்ள இ.ஓ.எஸ் 08 என்ற செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து தற்போது ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணியை செய்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
{{comments.comment}}