ஸ்ரீஹரிகோட்டா: இ.ஓ. எஸ் 08 என்ற செயற்கைக்கோளை எஸ்.எஸ்.எல்.வி டி- 3 என்ற ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 16ம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ. இதற்கான கவுண்ட்டவுன் நாளை தொடங்குகிறது.
புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இ.ஒ.எஸ்.-08 எனும் செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் எடை 175.5 கிலோ ஆகும். இதில் எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்ப்ராரெட் பேலோட், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் - ரெப்லெக்டோமெட்ரி பேலோட், சிக் யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வுக் கருவிகள் உள்ளன. இதன் பணிக்காலம் ஓராண்டாகும்.
இந்த நிலையில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து இ.ஓ.எஸ் 08 என்ற செயற்கைக்கோளை, எஸ்.எஸ்.எல்.வி- டி3 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதன் கவுண்டவுன் நாளை தொடங்குகிறது. இந்த செயற்கைகோள் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 9:17 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
இந்த செயற்கைக்கோள் பூமியை 24 மணி நேரமும் கண்காணித்து புகைப்படம் எடுக்கும். மேலும் இது பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ கண்டறிதல் போன்றவைக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் விண்ணில் செலுத்த தயாராக உள்ள இ.ஓ.எஸ் 08 என்ற செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து தற்போது ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணியை செய்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}