கடைக்கு சென்ற 10 வயது சிறுமியை முட்டி வீசிய மாடு.. உயிர் போச்சுன்னா யார் பொறுப்பு?.. தந்தை ஆவேசம்

Apr 26, 2024,05:01 PM IST
சென்னை: சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடைக்கு சென்ற 10 வயது சிறுமியை மாடு முட்டி தூக்கி வீசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான நகரங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. மக்கள் செல்வதற்கு வழியில்லாத வகையில் சாலை தோறும் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அதை விட மோசமாக மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. தெருவில் சுற்றி திரியும் மாடுகள் முட்டி காயமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாடுகளால் சிறுவர்கள் மற்றும் முதியோர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

மாடுகளை வளர்ப்போர் அவற்றை முறையாக பராமரிப்பதில்லை. பால் கறக்க மட்டுமே அதைத் தேடுகிறார்கள். மற்ற நேரங்களில் தீனி கூட போடாமல் தெருவில் விட்டு விடுகிறார்கள். அவையும் பாவம் போக்கிடம் இல்லாமல் தெருக்களிலும், சாலைகளிலும் திரிகின்றன. இதில் சில மாடுகள் முட்டி பலர் காயமடைவது தொடர் கதையாகி  வருகிறது.



சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது 10 வயது மகள் கடைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த மாடு முட்டி தூக்கி விசியுள்ளது. இதில் காயம் அடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், குழந்தையை கடைக்கு தான் அனுப்பினோம். குழந்தையின் எதிரே வந்த மாடு முட்டி தூக்கி வீசியது. காலையிலே மாட்டை அவிழ்து விட்டு  விடுகிறாங்க. தெருவில் அந்த மாடுகள் சுற்றித் திரிந்து வருது. அந்த மாடு இந்த ஏரியா மாடே கிடையாது. இந்த ஏரியாவுல யாரும் மாடு வளர்க்கல. பக்கத்து ஏரியா மாடு அது. இங்க பிள்ளைங்க நிறைய இருக்காங்க. என் பிள்ளைக்கு வந்த நிலை மத்த பிள்ளைகளுக்கு வந்தா. 

உயிர் போயிருச்சுனா என்னா செய்றது. இது யாரு மாடுனு கேட்டா என்னது இல்ல. உன்னது இல்லன்றாங்க. முட்டுனது எந்த மாடுன்னு கேட்குறாங்க. முட்டுன அந்த கருப்பு வெள்ள மாடயே இப்ப காணோம். இதற்கு முன்னாடி ஒரு வயதானவர் கூட மாடு முட்டி செத்தே போயிருக்காரு என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

சிந்தனைச் சிதறல்.. உணவும் ஓய்வுமே உழைப்பிற்கான ஆற்றல் மூலம்!

news

tn result 2026 தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

news

மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!

news

May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'

news

உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!

news

ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்