கடைக்கு சென்ற 10 வயது சிறுமியை முட்டி வீசிய மாடு.. உயிர் போச்சுன்னா யார் பொறுப்பு?.. தந்தை ஆவேசம்

Apr 26, 2024,05:01 PM IST
சென்னை: சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடைக்கு சென்ற 10 வயது சிறுமியை மாடு முட்டி தூக்கி வீசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான நகரங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. மக்கள் செல்வதற்கு வழியில்லாத வகையில் சாலை தோறும் மாடுகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அதை விட மோசமாக மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. தெருவில் சுற்றி திரியும் மாடுகள் முட்டி காயமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாடுகளால் சிறுவர்கள் மற்றும் முதியோர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

மாடுகளை வளர்ப்போர் அவற்றை முறையாக பராமரிப்பதில்லை. பால் கறக்க மட்டுமே அதைத் தேடுகிறார்கள். மற்ற நேரங்களில் தீனி கூட போடாமல் தெருவில் விட்டு விடுகிறார்கள். அவையும் பாவம் போக்கிடம் இல்லாமல் தெருக்களிலும், சாலைகளிலும் திரிகின்றன. இதில் சில மாடுகள் முட்டி பலர் காயமடைவது தொடர் கதையாகி  வருகிறது.



சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது 10 வயது மகள் கடைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த போது அப்பகுதியில் சுற்றித் திரிந்த மாடு முட்டி தூக்கி விசியுள்ளது. இதில் காயம் அடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், குழந்தையை கடைக்கு தான் அனுப்பினோம். குழந்தையின் எதிரே வந்த மாடு முட்டி தூக்கி வீசியது. காலையிலே மாட்டை அவிழ்து விட்டு  விடுகிறாங்க. தெருவில் அந்த மாடுகள் சுற்றித் திரிந்து வருது. அந்த மாடு இந்த ஏரியா மாடே கிடையாது. இந்த ஏரியாவுல யாரும் மாடு வளர்க்கல. பக்கத்து ஏரியா மாடு அது. இங்க பிள்ளைங்க நிறைய இருக்காங்க. என் பிள்ளைக்கு வந்த நிலை மத்த பிள்ளைகளுக்கு வந்தா. 

உயிர் போயிருச்சுனா என்னா செய்றது. இது யாரு மாடுனு கேட்டா என்னது இல்ல. உன்னது இல்லன்றாங்க. முட்டுனது எந்த மாடுன்னு கேட்குறாங்க. முட்டுன அந்த கருப்பு வெள்ள மாடயே இப்ப காணோம். இதற்கு முன்னாடி ஒரு வயதானவர் கூட மாடு முட்டி செத்தே போயிருக்காரு என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்