டெல்லி: இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தியின் மனைவியும், எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான சுதா மூர்த்தி, ராஜ்யசபா நியமன உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார்.
சுதா மூர்த்தியின் நியமனம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், சுதா மூர்த்தியை ராஜ்யசபா உறுப்பினராக நியமித்து, குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருப்பது குறித்து அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். சமூக சேவை, தானங்கள், கல்வி ஆகியவற்றில் தனது மிகுந்த பங்களிப்பை செலுத்தியவர் சுதாமூர்த்தி. அவரது செயல்கள் அனைத்தும் அனைவருக்கும் மிகச் சிறந்த முன்னுதாரணங்கள் ஆகும். இப்படிப்பட்ட பெண் சக்தி, ராஜ்யசபா உறுப்பினராகியிருப்பது மகிழ்ச்சியும், பெருமையும் தருகிறது. மிகச் சிறந்த நாடாளுமன்ற அனுபவம் அவருக்குக் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
முன்னதாக, கலைத்துறை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை ஆகிய துறைகளில் 12 பேரை ராஜ்யசபாவுக்கு நியமித்துள்ளார் குடியரசுத் தலைவர்.
சுதாமூர்த்தியின் கணவர் நாராயணமூர்த்திதான் இன்போசிஸ் ஐடி நிறுவனத்தை நிறுவியவர். அவரது மருமகன்தான் இங்கிலாந்து பிரதமராக இருக்கும் ரிஷி சுனாக் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதா மூர்த்தி மிகவும் சிம்பிளானவர். ஒரு என்ஜீனியராக டெல்கோ நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கியவர். அதுதான் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமாக உள்ளது. தற்போது இன்போசிஸ் பவுண்டேஷனின் தலைவராக இருக்கிறார் சுதா மூர்த்தி. கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் நூல்கள் எழுதியுள்ளார். அவை பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கு.. டிரம்ப்புக்கு நோஸ் கட் கொடுத்த .. அமெரிக்க ஏஐ தளங்கள்!
11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது என்று தெரியவில்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தந்தையை உளவு பார்த்த மகன்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு வைத்த டாக்டர் ராமதாஸ்!
விஜய்யின் காஸ்ட்லி மிஸ்.. ஓபிஎஸ்ஸை தவற விட்டது எப்படி?.. திமுகவின் மின்னல் வேக ஸ்கெட்ச்!
நலம் காக்கும் ஸ்டாலின்... சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு வைரமுத்து கோரிக்கை!
இன்று ஒரு கவிதை.. இனிமைத் தமிழ் மொழி எமது!
தங்கம் விலையில் அதிரடி... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!
{{comments.comment}}