டெல்லி: இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தியின் மனைவியும், எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான சுதா மூர்த்தி, ராஜ்யசபா நியமன உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார்.
சுதா மூர்த்தியின் நியமனம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், சுதா மூர்த்தியை ராஜ்யசபா உறுப்பினராக நியமித்து, குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருப்பது குறித்து அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். சமூக சேவை, தானங்கள், கல்வி ஆகியவற்றில் தனது மிகுந்த பங்களிப்பை செலுத்தியவர் சுதாமூர்த்தி. அவரது செயல்கள் அனைத்தும் அனைவருக்கும் மிகச் சிறந்த முன்னுதாரணங்கள் ஆகும். இப்படிப்பட்ட பெண் சக்தி, ராஜ்யசபா உறுப்பினராகியிருப்பது மகிழ்ச்சியும், பெருமையும் தருகிறது. மிகச் சிறந்த நாடாளுமன்ற அனுபவம் அவருக்குக் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
முன்னதாக, கலைத்துறை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை ஆகிய துறைகளில் 12 பேரை ராஜ்யசபாவுக்கு நியமித்துள்ளார் குடியரசுத் தலைவர்.
சுதாமூர்த்தியின் கணவர் நாராயணமூர்த்திதான் இன்போசிஸ் ஐடி நிறுவனத்தை நிறுவியவர். அவரது மருமகன்தான் இங்கிலாந்து பிரதமராக இருக்கும் ரிஷி சுனாக் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதா மூர்த்தி மிகவும் சிம்பிளானவர். ஒரு என்ஜீனியராக டெல்கோ நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கியவர். அதுதான் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமாக உள்ளது. தற்போது இன்போசிஸ் பவுண்டேஷனின் தலைவராக இருக்கிறார் சுதா மூர்த்தி. கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் நூல்கள் எழுதியுள்ளார். அவை பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
என்னையா இது... நேற்று குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயர்வு! எவ்வளவு தெரியுமா?
திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல சில உள்ளங்களை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஜூன் 21, 22 சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
{{comments.comment}}