"கோவிந்தா கோவிந்தா".. திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. கோடை விடுமுறை எதிரொலி!

May 18, 2024,08:53 AM IST

திருப்பதி: கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றது.


திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பர். திருப்பதி ஒரு வைணவ திருத்தலமாகும். இந்தியாவில் உள்ள முக்கிய கோவில் தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.  வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் இங்கு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இங்கு வரும் பக்தர்கள் பல மணி நேரம் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 




கோடை காலத்தில் இங்கு வரும் பக்தர்களுக்காக பல வசதிகள் செய்யப்பட்டள்ளன. இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி இந்த மாதத் தொடக்கத்தில் கூறுகையில், கோடை விடுமுறையில் திருமலை தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


உணவு, மோர், குடிநீர், காலை உணவு மற்றும் மருத்துவ வசதிகள் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கோவில் வீதிகளில், பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள  பகுதிகள் அனைத்திலும் வெயிலின் உஷ்ணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையில் பந்தல், கூல் பெயிண்டுகள், கார்பெட்டுகள் அமைத்துள்ளோம்.  அவ்வப்போது தண்ணீரை தரையில் தெளிக்கின்றோம்.


நாராயணகிரி தோட்டங்கள் மற்றும் கோவில் சுற்றுப்புறங்களில் பக்தர்கள் ஓய்வெடுக்க தற்காலிக கொட்டகைகள் அமைத்துள்ளோம். திருப்பதி ஏழுமலையான் கோவில் கோடை விடுமுறை காரணமாக சாமி தரிசனத்திற்கு வரும் சாமானி பக்தர்களுக்கு முன்னரிமை அளிக்கப்படுகிறது. இதனால் கோடைகாலம் முழுவதும் விஐபி தரிசனத்திற்கான சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.


இந்நிலையில்,  கடந்த சில தினங்களாக திருப்பதியில் கோடை விடுமுறையை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. கோடைகாலத்தில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்ட நிலையிலும், 5 கிலோமீட்டர் தூரம் நின்று, 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

WTC 2025 Finals: உலக டெஸ்ட் சாம்பியன் தென் ஆப்பிரிக்கா.. ஆஸ்திரேலியாவை வச்சு செய்து அபாரம்!

news

Dubai fire: துபாய் .. 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. உயிர் அபாயம் ஏதுமில்லை

news

இஸ்ரேல் தாக்குதல் : ஈரானில் இருந்து வெளியே முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்

news

சரமாரியான தாக்குதலால்.. தீவிரமடையும் இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் .. இந்தியா யார் பக்கம்?

news

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்.. பயணங்கள் தாமதமாகலாம் or ரத்தாகலாம்.. இண்டிகோ தகவல்

news

ஏர்இந்தியா விமான விபத்து பற்றி 3 மாதங்களுக்குள் விசாரிக்கப்படும் - அமைச்சர் ராம் மோகன் நாயுடு

news

ஏர் இந்தியா விமான விபத்து ஒரு சைபர் தாக்குதலா?... சந்தேகம் கிளப்பும் சிவசேனா !

news

இஸ்ரேல் தாக்குதலில் பலியான முப்படைத் தளபதி.. புதிய ராணுவ தளபதியை அறிவித்த ஈரான்

news

பற்றி எரியும் மத்திய கிழக்கு.. அனல் பறக்கும் சண்டையில் இஸ்ரேல் - ஈரான்.. மக்கள் பரிதவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்