கோடை விடுமுறை... 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Apr 15, 2025,02:58 PM IST

சென்னை: கோடை விடுமுறையையொட்டி 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடப்பட்டுள்ள கோடை விடுமுறையை ஒட்டி 6 வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள தகவலில்,


ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் மே 11 முதல் ஜூன் 1ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.




 வாரம்தோறும் திங்கள்கிழமை இயக்கப்படும் தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் மே 12 முதல் ஜூன் 2ம் தேதி வரையிலும்


வெள்ளிக்கிழமை மட்டும் இயக்கப்படும் தாம்பரம் - திருவனந்தபுரம் ரயில் மே 11 முதல் ஜூன் 1வரையிலும்


ஞாயிறு அன்று இயக்கப்படும் திருவனந்தபுரம் - தாம்பரம் ரயில் மே 11 முதல் ஜூன் 1 வரையிலும்


ஞாயிறு அன்று இயக்கப்படும் நெல்லை - மேட்டுப்பாளையம் ரயில் சேவை மே 11 முதல் ஜூன் 1 வரையிலும்


திங்கள்கிழமை இயக்கும் மேட்டுப்பாளையம் - நெல்லை ரயில் சேவை  மே 12 முதல் ஜூன் 2 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தேசிய கல்வி தினம் (National Education Day) இன்று!

news

கூட்ட நெரிசல் விவகாரம்.. அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு விரைவில் கரூர் வருகை

news

நடிகர் தர்மேந்திரா நலமாக இருக்கிறார்.. வதந்திகளை நம்பாதீர்கள்.. மகள் ஈஷா தியோல் கோரிக்கை

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. 2வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 11, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரப் போகும் ராசிகள்

news

அனைத்துக் கோணங்களிலும் விசாரணை.. உண்மையை கண்டறிவோம்.. அமைச்சர் அமித்ஷா

news

டெல்லி செங்கோட்டை அருகே.. கார் வெடித்துச் சிதறியது.. பலர் பலி.. டெல்லி முழுவதும் உஷார்

news

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் மனதை உலுக்கியது.. ராகுல் காந்தி, பிரியங்கா வேதனை

news

டெல்லி குண்டுவெடிப்பு அதிர்ச்சி தருகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி வேதனை

அதிகம் பார்க்கும் செய்திகள்