வயிற்றுக்குள்.. குத்தாட்டம் போடும் குடற்புழுக்களை.. அழித்து ஒழிக்கும் சூப்பர் காய்.. சுண்டைக்காய்!

Jun 12, 2025,03:02 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


உணவு பழக்கமும் பழமொழியும் என்ற தலைப்பில் இன்று பார்க்க இருப்பது "ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்" இதனை பற்றிய தகவல்களை பார்ப்போமா.


டர்க்கிபெரி (Turkey berry) என்று அழைக்கப்படும் சுண்டைக்காய் மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரம். தக்காளி கத்தரிக்காய் போன்ற காய்கறிகளைப் போலவே சுண்டைக்காயும் தாவரங்களின் அதே குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும்.


"சுண்டை" இதன் காய்கள் சுண்டி விடும் தன்மை உடையதால்  சுண்டைக்காய் என்கிற பெயர் வந்தது என்று கூறுவார்கள். சுண்டக்காய்க்கு வேறு பெயர்களும் உண்டு. மழைச்சுண்டை,  கடுகி, அமரக்காய் என்பதாகும்.




மலைச் சுண்டைக்காய் அதிக கசப்பை கொண்டது. வீட்டுத் தோட்டங்களில் வளரும் பால் சுண்டை கசப்பு சிறிது குறைவாக இருக்கும். நஞ்சு சுண்டை, காட்டுச் சுண்டை, குத்துச் சுண்டை    போன்ற வகைகளும்  இதனுள் உண்டு.


பலரும் விரும்பாத காய் சுண்டைக்காய் விளையாட்டாக ஒரு பழமொழி சொல்ல கேட்டிருப்போம் ..."சுண்டக்கா மாதிரி இருந்துட்டு என்ன வேலை செய்கிறான் பாரு" என்பதுதான். அதுதான் சுண்டைக்காய் சைஸ் சிறியதாக இருந்தாலும் அது தரும் நன்மைகளும் ஏராளம் ஏராளம்... தனித்துவமானதும் கூட.


சுண்டைக்காயின் அருமை பெருமைகளை பார்ப்போமா ... வற்றல் வகைகளில் அனைவரும் அறிந்தது சுண்டைக்காய் வற்றல் தான். 

அனைத்து விசேஷங்களில் ,திருமண விருந்துகளில், சைவ விருந்துகளில் வற்றல் குழம்பு பிடிக்காதவர்கள் யாரேனும் உண்டோ?....


சாம்பார் சாப்பிட்ட பின் வற்றல் குழம்பை ரசித்து ருசிப்பவர்கள்  இன்றும் ஏராளம். சுண்டைக்காயில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது .எலும்பு தேய்மானம் ,எலும்பின் உறுதி தன்மையை இழக்காமல் இருக்க சுண்டைக்காய் சாப்பிடுங்கள் .சளியை போக்கும் தன்மை உள்ளது. எனவே பிஞ்சு சுண்டைக்காய் குழம்பு அல்லது துவையல் வைத்து சாப்பிட நன்மை பயக்கும்.


சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்குகிறது .மாதம் இருமுறை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் பூச்சிகள் அழிக்கப்பட்டு விடும்.


சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது .கல்லீரல் மண்ணீரல் நோய்களையும் நீக்க உதவுகின்றது. இதன் கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதுடன் சர்க்கரை அளவை குறைக்கிறது .மூல நோய் உள்ளவர்கள் சுண்டைக்காயை நெயில் வதக்கி சாப்பிட மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும் .மூல நோயால் ஏற்படும் ரத்தக் கசிவு நீங்கிவிடும். உடல் சோர்வு ,மூட்டு வலி, போன்றவற்றிற்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து.


வயிற்றுக்குள் குத்தாட்டம் போடும் குடற்புழுக்களை அழித்து செரிமான பகுதியை சுத்தம் செய்ய சுண்டைக்காய் மிகச்சிறந்தது. சுண்டைக்காயில் உள்ள பீனாள்கள் மற்றும் ஆக்சிஜனேற்ற உள்ளடக்கம் போன்றவை குடல் இரைப்பை அழற்சி சமயங்களில் வயிற்று அமிலங்களை நடுநிலையாக்க உதவுகின்றது .இதனில் உள்ள நார் சத்துக்கள் உணவு செரிமானத்தை எளிதாக்குகிறது .இவை பசியை பராமரிக்கிறது. மேலும் எடை இழப்பை துரிதப்படுத்துகிறது வயிற்றுக் கோளாறு, வயிற்று மந்தம் போன்ற தொந்தரவுகளை சுண்டைக்காய் உட்கொள்ள நல்ல மருத்துவ பலனாக விளங்குகிறது.


"ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்" என்பதை பற்றி பார்த்தோம் இல்லையா ?..எனவே, கிடைக்கும்போது சுண்டைக்காயை தவறாமல் பயன்படுத்தி சமைத்து உட்கொண்டு நல்வாழ்வு வாழ்வோமாக... மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிசயம் ஆனால் உண்மை... நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்கு தெரியவில்லை: விஷ்வாஸ் குமார் ரமேஷ்!

news

ஜூலை 25 முதல் 100 நாள்.. மக்கள் உரிமை மீட்புப் பயணம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

news

என் மூச்சுக் காற்று இருக்கும் வரை நானே பாமக தலைவர்: டாக்டர் ராமதாஸ் திட்டவட்டம்!

news

காமராஜர், இளைய காமராஜர்னு சொல்லாதீங்க - தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்!

news

சென்னை கோயம்பேடு சந்தை: இன்றைய காய்கறிகளின் விலை எவ்வளவு தெரியுமா?

news

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை...ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1560 உயர்வு!

news

ஈரானின் அணு சக்தி நிலையங்களைக் குறி வைத்து அதிரடி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. பெரும் பதட்டம்

news

வெள்ளிக்கிழமைகளில்.. வைபவ லட்சுமி பூஜை வழிபாடு மிகவும் சிறந்தது!

news

இந்தியாவை உலுக்கிய.. ஏர்இந்தியா விமான விபத்து.. அகமதாபாத்துக்கு பிரதமர் மோடி வருகை

அதிகம் பார்க்கும் செய்திகள்