கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்தில் இந்த ஆண்டு அதிக அளவிலான வேலையிழப்பு இருக்கும் என்று ஊழியர்களுக்கு இமெயில் மூலம் தகவல் கொடுத்துள்ளார் அதன் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை. இதுதொடர்பான செய்தியை வெர்ஜ் இதழ் வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் செயலாக்கத்தை எளிமையாக்கவும், சில துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் இந்த லே ஆப் அவசியமாகிறது என்று சுந்தர் பிச்சை விளக்கியுள்ளார். இதன் மூலம் கடந்த வருடம் போலவே இந்த வருடமும் அதிக அளவிலான லே ஆப்பில் கூகுள் ஈடுபடும் என்று ஊழியர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் செயற்கை நுன்னணறிவுத் தொழில்நுட்பத்துக்கு மாறத் தொடங்கி விட்டன. இயந்திரமயமாக்கலும் அதிகரித்து விட்டது. இதனால் ஏற்கனவே பலருக்கு வேலை போய்க் கொண்டுள்ளது. இந்த நிலையில் சுந்தர் பிச்சையின் இந்த கூற்று, மேலும் பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது.

அதேசமயம், வேலை நீக்கம் என்பது கடந்த ஆண்டு போல அதிகமாக இருக்காது என்றும், எல்லாத் துறைகளிலும் கை வைக்க மாட்டோம் என்றும் சுந்தர் பிச்சை விளக்கியுள்ளார். இந்த இமெயிலில் உள்ள பிற தகவல்கள் குறித்த விவரம் தெரியவில்லை. அதேசமயம் கூகுள் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த மெயில் அனுப்பப்பட்டுள்ளதால், அத்தனை பேரும் பீதியில் உறைந்துள்ளனராம்.
பார்க்கலாம் எத்தனை பேரின் வயிற்றில் கூகுள் மண்ணை அள்ளிப் போடப் போகிறது என்பதை.
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!
அரங்கன் யாவுமே அறிந்தவனே!
அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து
தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
{{comments.comment}}