கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்தில் இந்த ஆண்டு அதிக அளவிலான வேலையிழப்பு இருக்கும் என்று ஊழியர்களுக்கு இமெயில் மூலம் தகவல் கொடுத்துள்ளார் அதன் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை. இதுதொடர்பான செய்தியை வெர்ஜ் இதழ் வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் செயலாக்கத்தை எளிமையாக்கவும், சில துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் இந்த லே ஆப் அவசியமாகிறது என்று சுந்தர் பிச்சை விளக்கியுள்ளார். இதன் மூலம் கடந்த வருடம் போலவே இந்த வருடமும் அதிக அளவிலான லே ஆப்பில் கூகுள் ஈடுபடும் என்று ஊழியர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் செயற்கை நுன்னணறிவுத் தொழில்நுட்பத்துக்கு மாறத் தொடங்கி விட்டன. இயந்திரமயமாக்கலும் அதிகரித்து விட்டது. இதனால் ஏற்கனவே பலருக்கு வேலை போய்க் கொண்டுள்ளது. இந்த நிலையில் சுந்தர் பிச்சையின் இந்த கூற்று, மேலும் பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது.

அதேசமயம், வேலை நீக்கம் என்பது கடந்த ஆண்டு போல அதிகமாக இருக்காது என்றும், எல்லாத் துறைகளிலும் கை வைக்க மாட்டோம் என்றும் சுந்தர் பிச்சை விளக்கியுள்ளார். இந்த இமெயிலில் உள்ள பிற தகவல்கள் குறித்த விவரம் தெரியவில்லை. அதேசமயம் கூகுள் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த மெயில் அனுப்பப்பட்டுள்ளதால், அத்தனை பேரும் பீதியில் உறைந்துள்ளனராம்.
பார்க்கலாம் எத்தனை பேரின் வயிற்றில் கூகுள் மண்ணை அள்ளிப் போடப் போகிறது என்பதை.
சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரண வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026 : வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.. நாளை மனுக்கள் பரிசீலனை
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதல்
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is
{{comments.comment}}