கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்தில் இந்த ஆண்டு அதிக அளவிலான வேலையிழப்பு இருக்கும் என்று ஊழியர்களுக்கு இமெயில் மூலம் தகவல் கொடுத்துள்ளார் அதன் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை. இதுதொடர்பான செய்தியை வெர்ஜ் இதழ் வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் செயலாக்கத்தை எளிமையாக்கவும், சில துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் இந்த லே ஆப் அவசியமாகிறது என்று சுந்தர் பிச்சை விளக்கியுள்ளார். இதன் மூலம் கடந்த வருடம் போலவே இந்த வருடமும் அதிக அளவிலான லே ஆப்பில் கூகுள் ஈடுபடும் என்று ஊழியர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் செயற்கை நுன்னணறிவுத் தொழில்நுட்பத்துக்கு மாறத் தொடங்கி விட்டன. இயந்திரமயமாக்கலும் அதிகரித்து விட்டது. இதனால் ஏற்கனவே பலருக்கு வேலை போய்க் கொண்டுள்ளது. இந்த நிலையில் சுந்தர் பிச்சையின் இந்த கூற்று, மேலும் பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது.
அதேசமயம், வேலை நீக்கம் என்பது கடந்த ஆண்டு போல அதிகமாக இருக்காது என்றும், எல்லாத் துறைகளிலும் கை வைக்க மாட்டோம் என்றும் சுந்தர் பிச்சை விளக்கியுள்ளார். இந்த இமெயிலில் உள்ள பிற தகவல்கள் குறித்த விவரம் தெரியவில்லை. அதேசமயம் கூகுள் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த மெயில் அனுப்பப்பட்டுள்ளதால், அத்தனை பேரும் பீதியில் உறைந்துள்ளனராம்.
பார்க்கலாம் எத்தனை பேரின் வயிற்றில் கூகுள் மண்ணை அள்ளிப் போடப் போகிறது என்பதை.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}