சென்னை: தான் உடல் நலம் குணமடைய வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு சமீபத்தில் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதயத்திற்கு செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அது சரி செய்யப்பட்டு அவருக்கு ஸ்டெண்ட் பொருத்தப்பட்டது. தற்போது உடல்நலம் குணமடைந்து நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பி உள்ளார்.

ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்தபோது அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு ஆளுநர் ரவி, முதல்வர் மு. க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்களும் திரையுலக பிரமுகர்களும் பல்துறை பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ள ரஜினிகாந்த் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார். நான் மருத்துவமனையில் இருக்கும்போது, எனது நலன் விசாரித்து, நான் சீக்கிரம் குணமடைய வாழ்த்திய, எனது அருமை நண்பர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விடுத்துள்ள நன்றிச் செய்தியில், நான் விரைவில் குணமடைய வேண்டும் என்று மனதார வாழ்த்திய தமிழக எதிர்க்கட்சி தலைவர் நண்பர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி என்று கூறியுள்ளார்.
இதேபோல பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர். என். ரவி, நடிகர் அமிதாப் பச்சன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். மேற்கண்ட தலைவர்களுக்கு தனித் தனியாக நன்றி தெரிவித்து்ள ரஜினிகாந்த், இதுதவிர தன்னை வாழ்த்தி தனக்காக பிரார்த்தித்த மற்றவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!
{{comments.comment}}