அரசியலையும் மதத்தையும் பிரித்தால் .. வெறுப்பு பேச்சு குறையும்.. சுப்ரீம் கோர்ட்

Mar 30, 2023,12:41 PM IST
டெல்லி: நாட்டில் வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்து வருகின்றன. அரசியல்வாதிகள், மதத்தை அரசியலில் கலக்காமல் அதைக் கைவிட்டால்தான், வெறுப்பு பேச்சுக்களும் ஒழியும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

பல்வேறு மாநில அரசுகள் அவதூறு வழக்குகள் குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவை நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்தினா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்தபோது இந்தக் கருத்தை வெளியிட்டது.



நீதிபதி கே.எம்.ஜோசப் கூறுகையில், ஜவஹர்லால் நேருவும், அடல் பிஹாரி வாஜ்பாயும் பேசினால், அதைக் கேட்பதற்கு மக்கள் அலைகடலென திரண்டார்கள். நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அவர்களது பேச்சுக்கள் சென்றடைந்தன.

எப்போது பிரச்சினை வருகிறது என்றால் மதத்துடன், அரசியலைக் கலக்கும்போதுதான். இந்த வேலையை செய்வது அரசியல்வாதிகள்தான். மதத்தையும், அரசியலையும் பிரித்து வைக்க வேண்டும். அதை செய்யும்போதுதான் இந்த வெறுப்பு பேச்சுக்களும் ஒழியும். இதை அரசியல்வாதிகள்தான் செய்தாக வேண்டும்.  அரசியலுடன் மதத்தைக் கலப்பது ஜனநாயகத்திற்குப் பேராபத்தாகும்.

எத்தனை நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத்தான் போடுவது.. யாரையும் நாங்கள் அவதூறாகப் பேச மாட்டோம். வெறுப்பு பேச்சை வெளியிட மாட்டோம். யாரையும் இழிவுபடுத்த மாட்டோம் என்று இந்த நாட்டு மக்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பு அடுத்த தரப்பை இழிவுபடுத்தும், கேவலப்படுத்தியும் பேசிக் கொண்டேதான் இருக்கிறது. டிவியிலும், சமூக வலைதளங்களிலும் இதைத்தான் பார்க்கிறோம்.

நாங்கள் அரசியல்சாசனத்தை பின்பற்றுகிறோம். அதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு தீர்ப்பையும் சொல்கிறோம். ஒவ்வொரு தீர்ப்பும், சட்டத்தால் கட்டமைக்கப்பட்ட கட்டடத்தின் செங்கல் போலாகும். அவதூறு வழக்குகள் மீது மாநில அரசுகள்  உரிய நடவடிக்கை எடுக்காமல் தாமதிப்பது நல்லது.  மாநில அரசுகள் செயலிழக்கும்போது அதன் வேலையை சுப்ரீம் கோர்ட் பார்க்க நேரிடுகிறது. ஏன் மாநில அரசுகள் இப்படி மெத்தனமாக இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யை அப்பாவாக.. அண்ணனாக.. எங்கள் உயிராக நினைக்கிறோம்.. MLA வேல்முருகனுக்கு பதில் அளித்த மாணவி!

news

அதிசயம் ஆனால் உண்மை... நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்கு தெரியவில்லை: விஷ்வாஸ் குமார் ரமேஷ்!

news

ஜூலை 25 முதல் 100 நாள்.. மக்கள் உரிமை மீட்புப் பயணம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

news

என் மூச்சுக் காற்று இருக்கும் வரை நானே பாமக தலைவர்: டாக்டர் ராமதாஸ் திட்டவட்டம்!

news

காமராஜர், இளைய காமராஜர்னு சொல்லாதீங்க - தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்!

news

சென்னை கோயம்பேடு சந்தை: இன்றைய காய்கறிகளின் விலை எவ்வளவு தெரியுமா?

news

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை...ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1560 உயர்வு!

news

ஈரானின் அணு சக்தி நிலையங்களைக் குறி வைத்து அதிரடி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. பெரும் பதட்டம்

news

வெள்ளிக்கிழமைகளில்.. வைபவ லட்சுமி பூஜை வழிபாடு மிகவும் சிறந்தது!

அதிகம் பார்க்கும் செய்திகள்