சூர்யா 45.. புதிய இசையமைப்பாளராக சாய் அபயங்கர் அறிமுகம்.. 20 வயசுதான்.. யார் தெரியுமா?

Dec 09, 2024,05:45 PM IST

சென்னை: சூர்யா 45 வது திரைப்படத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் விலகியதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற அறிவிப்பையு படக்குழு வெளியிட்டுள்ளது. சாய் அபயங்கர் புதிய இசையமைப்பாளராக வந்துள்ளார்.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில்  உருவான கங்குவா திரைப்படம் தீபாவளி முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் சவுண்ட் எபெக்ட் மைனஸ் ஆனதால் படம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. இதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 45 ஆவது படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியானது.




நடிகரும் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 வது திரைப்படத்தில் கமிட்டாகி இருந்தார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. லப்பர் பந்து படத்தில் நடித்து அனைத்து தரப்பு மக்களிடையே பாராட்டு பெற்ற நடிகை ஸ்வாஸிகா இப்படத்தில் நடிக்கிறார். அதேபோல் பிகில், மெர்சல் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் ஒளிப்பதிவு செய்த ஜிகே விஷ்ணு இப்படத்தில் ஒளிப்பதிவை கையாளுகிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. 


இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது சொந்த காரணங்களுக்காக ஏ ஆர் ரகுமான் சூர்யா 45 வது திரைப்படத்திலிருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியானது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஏ ஆர் ரகுமான் விலகியது குறித்து முறையான காரணங்கள் வெளியாகவில்லை. ஆனால் மனைவியின் விவாகரத்துக்குப் பிறகு ஏ ஆர் ரகுமான் சிறிது காலம்  இசையமைப்பிலிருந்து விலக இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.


இதற்கிடையே சூர்யா நடிக்கும்  பெயரிடாத படமான சூர்யா 45 வது படத்தின் பட பூஜை  தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சூர்யாவின் 45 வது படத்தில் ஏ ஆர் ரகுமான் விலகியதைத் தொடர்ந்து சூர்யா 45 வது படத்தில் யார் இசையமைக்கிறார் என்பது தொடர்பான அறிவிப்பை படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில்  வெளியிட்டுள்ளது. தில் சூர்யா 45  வது படத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


சாய் அபயங்கருக்கு இது 2வது படமாகும். இதற்கு முன்பு பென்ஸ் என்ற படத்தில் இசையமைத்திருந்தார். பாடகராகவும் வலம் வரும் சாய் அபயங்கர், 3 ஆல்பங்களில் பாடியுள்ளார். இப்போதுதான் அவருக்கு மிகப் பெரிய நடிகரின் படம் கிடைத்துள்ளது. சரி, சாய் அபயங்கர் யார் தெரியுமா.. பின்னணிப் பாடகர்களான திப்பு - ஹரிணி ஆகியோரின் மகன்தான் சாய் அபயங்கர். 20 வயதுதான் ஆகிறது சாய்க்கு. சூர்யா படத்தின் மூலம் அவர் இன்னொரு அனிருத்தாக அதிரடி காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்