சென்னை: சூர்யா 45 வது திரைப்படத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் விலகியதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற அறிவிப்பையு படக்குழு வெளியிட்டுள்ளது. சாய் அபயங்கர் புதிய இசையமைப்பாளராக வந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படம் தீபாவளி முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் சவுண்ட் எபெக்ட் மைனஸ் ஆனதால் படம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. இதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 45 ஆவது படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியானது.

நடிகரும் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 வது திரைப்படத்தில் கமிட்டாகி இருந்தார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. லப்பர் பந்து படத்தில் நடித்து அனைத்து தரப்பு மக்களிடையே பாராட்டு பெற்ற நடிகை ஸ்வாஸிகா இப்படத்தில் நடிக்கிறார். அதேபோல் பிகில், மெர்சல் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் ஒளிப்பதிவு செய்த ஜிகே விஷ்ணு இப்படத்தில் ஒளிப்பதிவை கையாளுகிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது சொந்த காரணங்களுக்காக ஏ ஆர் ரகுமான் சூர்யா 45 வது திரைப்படத்திலிருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியானது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஏ ஆர் ரகுமான் விலகியது குறித்து முறையான காரணங்கள் வெளியாகவில்லை. ஆனால் மனைவியின் விவாகரத்துக்குப் பிறகு ஏ ஆர் ரகுமான் சிறிது காலம் இசையமைப்பிலிருந்து விலக இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே சூர்யா நடிக்கும் பெயரிடாத படமான சூர்யா 45 வது படத்தின் பட பூஜை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சூர்யாவின் 45 வது படத்தில் ஏ ஆர் ரகுமான் விலகியதைத் தொடர்ந்து சூர்யா 45 வது படத்தில் யார் இசையமைக்கிறார் என்பது தொடர்பான அறிவிப்பை படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தில் சூர்யா 45 வது படத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சாய் அபயங்கருக்கு இது 2வது படமாகும். இதற்கு முன்பு பென்ஸ் என்ற படத்தில் இசையமைத்திருந்தார். பாடகராகவும் வலம் வரும் சாய் அபயங்கர், 3 ஆல்பங்களில் பாடியுள்ளார். இப்போதுதான் அவருக்கு மிகப் பெரிய நடிகரின் படம் கிடைத்துள்ளது. சரி, சாய் அபயங்கர் யார் தெரியுமா.. பின்னணிப் பாடகர்களான திப்பு - ஹரிணி ஆகியோரின் மகன்தான் சாய் அபயங்கர். 20 வயதுதான் ஆகிறது சாய்க்கு. சூர்யா படத்தின் மூலம் அவர் இன்னொரு அனிருத்தாக அதிரடி காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!
எங்கள் வீட்டில் எல்லா நாளும்.. The Importance of Joint Family
பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ
நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஒப்புதல்
முடியப் போகும் வருடம்.. மறப்போம்.. மன்னிப்போம்.. I'm sorry!
சுட்டக் காத்திருக்கும் விரல்கள்.. The role of Criticism!
ஆரோக்கியத்தின் சுரங்கம் வெந்தயக் கீரை: சர்க்கரை நோய் முதல் செரிமானம் வரை தீர்வு தரும் அற்புத மூலிகை!
குருவாயூரின் சுவாசம் நாராயணீயம்!
{{comments.comment}}