டில்லி : 2024ம் ஆண்டில் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 02ம் தேதி நிகழ உள்ளது. இது எந்த நேரத்தில் நிகழ உள்ளது? இந்தியாவில் இதை பார்க்க முடியுமா? என்பதை பற்றி வாங்க தெரிஞ்சுக்கலாம்.
சூரியனுக்கும், பூமிக்கு இடையே சந்திரன் கடக்கும் நிகழ்வை சூரிய கிரகணம் என்று சொல்கிறோம். ஆனால் இதனால் சூரியன் முழுவதுமாக மறைந்து விடாது. ஒரு நெருப்பு வளையம் போன்ற தோற்றத்தில் சூரியன் தெரியும். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சூரியன் மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்வது உண்டு.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 08ம் தேதி நிகழ்ந்த நிலையில், இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 02ம் தேதியான நாளை நிகழ உள்ளது. இந்திய நேரப்படி அக்டோபர் 02ம் தேதி இரவு 09.13 மணிக்கு துவங்கி, அக்டோபர் 03.ம் தேதி அதிகாலை 03.17 வரை இந்த கிரகணம் நீடிக்கும். கடைசி 7 நிமிடங்கள் 25 விநாடிகள் உச்சபட்ச கிரகண நேரமாக சொல்லப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை இரவு நேரத்தில் இந்த சூரிய கிரகணம் நிகழ்வதால் இதனை பார்க்க முடியாது. இந்தியாவின் எந்த பகுதியில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது.
அதே சமயம் தெற்கு அமெரிக்கா, குறிப்பாக சிலி, அர்ஜெண்டினா, பசிபிக் பெருங்கடல், பெரு, ஃபிஜி, பிரேசில், உருகுவே உள்ளிட்ட நாடுகளிலும், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் சூரிய கிரகணத்தை காண முடியும். இந்த சூரிய கிரகணம் 93 சதவீதம் சூரியனை மறைக்கும் நிகழ்வாக நிகழும் என சொல்லப்படுகிறது.
சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது என்றாலும், மற்ற ஆசிய நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் காண முடியும் என சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி கிடையாது: புதுச்சேரி சபாநாயகர் செல்வம்
உக்ரைன் - ரஷ்யா போர்.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதாய்யா.. லேட்டாகுமாம்.. அமெரிக்கா அறிவிப்பு!
டிட்வா புயல் பாதிப்பு...ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம்: அமைச்சர் k.k.s.s.r.ராமச்சந்திரன் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை லீவு?.. என்ன காரணம் தெரியுமா.. வாங்க இதைப் படியுங்க!
மதகு சரி செய்யாததால் குழந்தை உயிரிழப்பு... திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில்.. 2.33 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. பரணி தீபத்தின் விசேஷம் என்ன தெரியுமா?
{{comments.comment}}