டில்லி : 2024ம் ஆண்டில் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 02ம் தேதி நிகழ உள்ளது. இது எந்த நேரத்தில் நிகழ உள்ளது? இந்தியாவில் இதை பார்க்க முடியுமா? என்பதை பற்றி வாங்க தெரிஞ்சுக்கலாம்.
சூரியனுக்கும், பூமிக்கு இடையே சந்திரன் கடக்கும் நிகழ்வை சூரிய கிரகணம் என்று சொல்கிறோம். ஆனால் இதனால் சூரியன் முழுவதுமாக மறைந்து விடாது. ஒரு நெருப்பு வளையம் போன்ற தோற்றத்தில் சூரியன் தெரியும். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சூரியன் மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்வது உண்டு.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 08ம் தேதி நிகழ்ந்த நிலையில், இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 02ம் தேதியான நாளை நிகழ உள்ளது. இந்திய நேரப்படி அக்டோபர் 02ம் தேதி இரவு 09.13 மணிக்கு துவங்கி, அக்டோபர் 03.ம் தேதி அதிகாலை 03.17 வரை இந்த கிரகணம் நீடிக்கும். கடைசி 7 நிமிடங்கள் 25 விநாடிகள் உச்சபட்ச கிரகண நேரமாக சொல்லப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை இரவு நேரத்தில் இந்த சூரிய கிரகணம் நிகழ்வதால் இதனை பார்க்க முடியாது. இந்தியாவின் எந்த பகுதியில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது.
அதே சமயம் தெற்கு அமெரிக்கா, குறிப்பாக சிலி, அர்ஜெண்டினா, பசிபிக் பெருங்கடல், பெரு, ஃபிஜி, பிரேசில், உருகுவே உள்ளிட்ட நாடுகளிலும், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் சூரிய கிரகணத்தை காண முடியும். இந்த சூரிய கிரகணம் 93 சதவீதம் சூரியனை மறைக்கும் நிகழ்வாக நிகழும் என சொல்லப்படுகிறது.
சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது என்றாலும், மற்ற ஆசிய நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் காண முடியும் என சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!
{{comments.comment}}