டில்லி : 2024ம் ஆண்டில் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 02ம் தேதி நிகழ உள்ளது. இது எந்த நேரத்தில் நிகழ உள்ளது? இந்தியாவில் இதை பார்க்க முடியுமா? என்பதை பற்றி வாங்க தெரிஞ்சுக்கலாம்.
சூரியனுக்கும், பூமிக்கு இடையே சந்திரன் கடக்கும் நிகழ்வை சூரிய கிரகணம் என்று சொல்கிறோம். ஆனால் இதனால் சூரியன் முழுவதுமாக மறைந்து விடாது. ஒரு நெருப்பு வளையம் போன்ற தோற்றத்தில் சூரியன் தெரியும். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சூரியன் மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்வது உண்டு.
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 08ம் தேதி நிகழ்ந்த நிலையில், இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 02ம் தேதியான நாளை நிகழ உள்ளது. இந்திய நேரப்படி அக்டோபர் 02ம் தேதி இரவு 09.13 மணிக்கு துவங்கி, அக்டோபர் 03.ம் தேதி அதிகாலை 03.17 வரை இந்த கிரகணம் நீடிக்கும். கடைசி 7 நிமிடங்கள் 25 விநாடிகள் உச்சபட்ச கிரகண நேரமாக சொல்லப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை இரவு நேரத்தில் இந்த சூரிய கிரகணம் நிகழ்வதால் இதனை பார்க்க முடியாது. இந்தியாவின் எந்த பகுதியில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது.
அதே சமயம் தெற்கு அமெரிக்கா, குறிப்பாக சிலி, அர்ஜெண்டினா, பசிபிக் பெருங்கடல், பெரு, ஃபிஜி, பிரேசில், உருகுவே உள்ளிட்ட நாடுகளிலும், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் சூரிய கிரகணத்தை காண முடியும். இந்த சூரிய கிரகணம் 93 சதவீதம் சூரியனை மறைக்கும் நிகழ்வாக நிகழும் என சொல்லப்படுகிறது.
சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது என்றாலும், மற்ற ஆசிய நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் காண முடியும் என சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ரசிகர்களே.. உங்களது அன்புக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையே இல்லை.. அஜீத் குமார்நெகிழ்ச்சி!
ஈரோடு கிழக்கில் களம் காணும் ஆசிரியை சீதாலட்சுமி.. வேட்பாளரை அறிவித்தார் சீமான்.. 2வது முறையாக போட்டி
இயற்பெயர்களுக்கு திரும்பும் முன்னணி நடிகர்கள்... தமிழ் சினிமாவின் புதிய டிரெண்ட்.. அப்போ ரஜினி?
தமிழ்நாடு முழுவதும் களை கட்டிய பொங்கல் திருநாள்.. வீடுகள் தோறும் Happy Pongalo Pongal!
சீறிப் பாயும் காளைகள்.. விறுவிறு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. பொங்கல் நாளில் கோலாகலம்!
பொங்கல் பண்டிகை 2025 : தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்.. நோட் பண்ணிக்குங்க!
மகிழ்ச்சி பொங்கட்டும்.. நல்லிணக்கம் வளரட்டும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பொங்கல் வைக்கும் நேரத்தில் நாளை மழை பெய்யுமா.. என்ன சொல்கிறது வானிலை மையம்?
மாடு பிடிமாடு.. அதிகமாக பிடிச்சது யாரு.. இந்தா பிடி காரு.. களைகட்டப் போகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
{{comments.comment}}