நான் வாசித்த புத்தகம்!

Feb 26, 2026,01:34 PM IST

- தி. மீரா


புத்தகம் எந்த அளவிற்கு ஒருவரின் நேரத்தை பொன்னாகவும் நமது சிந்தனையையும் உயர்த்துகிறது என்பதை வாசித்து தெரிந்து கொள்ள வேண்டும்.


அப்படி எண்ணற்ற புத்தகங்கள் நான் படித்து இருந்தாலும் அதில் என்னைக் கவர்ந்த ஒரு புத்தகம் இறையன்பு ஐயா எழுதிய உன்னை அறிந்தால் என்ற புத்தகம்.


இந்த புத்தகம் மிக அழகாக தீதும் நன்றும் பிறர் தர வாரா.ஒருவரின் மனம் எப்படி இருக்கிறதோ அதை வைத்தே உலகம் பார்க்கப்படுகிறது.தன்னை அறிந்தவன் தரணி ஆள்கிறான்.


நாம் பொதுவாக வெளியில் ஒரு நல்ல மதிப்பு மரியாதை வருவதற்காக பொய் முகங்களுடன் வலம் வருகிறோம்.ஆனால் நம்மை நாம் ஏமாற்றுவது தெரிவதில்லை.




நாளடைவில் பொய்யை உண்மையாகவும் உண்மையை பொய்யாகாவும் எண்ணி உலகில் வாழ்ந்து வருவது நமக்கான வாழ்க்கையை சரியாக வாழ முடியாமல் செய்கிறது.


இந்த புத்தகத்தை படித்து பிறகு மிக அழகாக நமது பலம் பலவீனம் நம்மைப் பற்றிய சரியான அறிதல் தெரிதல் புரிதல் நடைபெறுகிறது.


இந்த புத்தகத்தின் சிறப்பு மனதை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது.நம்மை நாம் சரியாக அறியும் பொழுது உலகத்தை மற்ற மனிதர்களை சரியாக கணிக்க முடிகிறது.


எண்ணற்ற உளவியல் கருத்துகள் உலக நடைமுறை இன்றைய திருமண வாழ்வின் தோல்விகளுக்கான காரணம் என அற்புதமாக கருத்துகளை பதிவு செய்துள்ளார். நூலை படித்தால் நம்மை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

செம்மொழியான தமிழ் மொழியே

news

தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!

news

இயற்கை நீதி!

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

அதிகம் பார்க்கும் செய்திகள்