#DMKFiles2: டிரங்க் பெட்டி நிறைய "ஊழல் பட்டியல்".. ஆளுநரிடம் கொடுத்தார் அண்ணாமலை

Jul 26, 2023,05:28 PM IST

சென்னை : திமுக செய்த ஊழல்களுக்கான ஆதாரங்கள் அடங்கிய இரண்டாவது  விபர பட்டியல் என்று கூறி டிரங்க் பெட்டி நிறைய ஒரு புகார் மனுவை தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியிடம்,  பாஜக தலைவர் அண்ணாமலை இன்று நேரில் சந்தித்து ஒப்படைத்துள்ளார்.


திமுக.,வின் ஊழல்களை ஆதரங்களுடன் வெளியிடப் போவதாக அறிவித்த அண்ணாமலை முதல் பட்டியலை ஏப்ரல் 14 ம் தேதி அன்று வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. ஆனால் இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அண்ணாமலைக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வழக்கும் தொடரப்பட்டது. முன்னாள் அமைச்சர் டிஆர் பாலு சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளார். சமீபத்தில்தான் அந்த வழக்கில் ஆஜராகி விட்டு வந்தார் அண்ணாமலை.


ஆனால் விரைவில் 2வது பட்டியல் வெளியிடப்படும் என்று கோர்ட்டுக்கு வெளியே வந்து அறிவித்தார் அண்ணாமலை. இப்பதான் நாங்க சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பிச்சிருக்கோம் என்றும் பாஜக வக்கீல்களைப் பாராட்டியும் பேசினார். 




இதற்கிடையில் திமுக குடும்பத்தினர் செய்த ஊழல் பற்றி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ ஒன்றையும் அண்ணாமலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இதனால் திமுக.,வில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு. இது போலியானது என திமுக சொன்னாலும் நிதியமைச்சர் பதவியில் இருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை தூக்கி விட்டு, அவருக்கு இலாகா மாற்றி கொடுக்கப்பட்டது. இப்போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்  பரபரப்பில்லாத அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.


ஏற்கனவே செந்தில் பாலாஜி, பொன்முடி என முக்கிய அமைச்சர் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளும் நடந்து வரும் பரபரப்பான நிலையில், திமுக.,வின் ஊழல்களுக்கான ஆதாரம் அடங்கிய இரண்டாவது பட்டியலை டிரெங்கு பெட்டியில் வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், அண்ணாமலை அளித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவீட்டுகளில், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர்களுடன் இணைந்து சென்று சந்தித்தோம். இதுதொடர்பாக பாதயாத்திரையின்போது ஊடகங்கள் மற்றும் மீடியா நண்பர்களிடம் விரிவாக விளக்கிக் கூறுவோம். இந்தப் புகார்கள் தொடர்பாக ஊழல் திமுக அரசிடமிருந்து விடைகளை எதிர்பார்க்கிறோம்


மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ₹5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார் அண்ணாமலை.


#DMKFiles2 என்ற தலைப்பில் அண்ணாமலை பதிவிட்டுள்ள ட்வீட்டில், பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி ஒரு பெரிய பட்டியல் இடம் பெற்றுள்ளது. அவர் இந்த ட்வீட்டை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் #DMKFiles2 என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி முதலிடம் பிடித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!

news

திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்

news

ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!

news

சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)

news

ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)

news

கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க

news

வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!

news

தாயன்பு !

news

All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்