ஆர் எஸ் எஸ் பேரணியில் பங்கேற்போருக்கு அறிவுரை கூறுவது  ஏனோ?.. பாஜக கேள்வி

Apr 15, 2023,03:17 PM IST
சென்னை: யாரை காரணம் காட்டி அனுமதி மறுத்தீர்களோ, அவர்களை மறந்து விட்டு, காரணமே இல்லாமல் ஆர் எஸ் எஸ் பேரணியில் பங்கேற்போருக்கு அறிவுரை கூறுவது  ஏனோ? என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு காவல்துறையும் பேரணி நடத்த  அனுமதி கொடுத்துள்ளது. அதேசமயம்,  பல்வேறு கடும் கட்டுப்பாடுகளையும் காவல்துறை விதித்துள்ளது.

லத்தி போன்ற ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது, பொதுமக்களுக்கு இடையூறு செய்யக் கூடாது,  தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக கோஷமிடக் கூடாது, திட்டமிட்ட பாதையில் மட்டுமே செல்ல வேண்டும், எந்த  மதத்திற்கு எதிராகவும் முழக்கமிடக் கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது.



இதுகுறித்து நாராயணன் திருப்பதி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்:

ஆர் எஸ் எஸ் பேரணியில் பங்கேற்போர் லத்தி, காயமேற்படுத்தும் ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடாது. சாதி, மதம் உள்ளிட்டவை தொடர்பான பாடவோ, கோஷமிடவோ கூடாது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும், வாகன நெரிசல் ஏற்படாத வகையிலும் பேரணி நடத்த வேண்டும் - தமிழக டி ஜி பி ஷைலேந்திரபாபு.

"ஆர் எஸ் எஸ் பேரணி நடந்தால் தடை செய்யப்பட்ட மத அடிப்படைவாத பி எஃப் ஐ அமைப்பினால் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளதாலும், சில சமூக விரோத தீய சக்திகள் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியை குலைத்து, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வாய்புள்ளதாலும்" பேரணி நடக்க அனுமதி மறுத்தது காவல்துறை.  ஆனால், பேரணியை அனுமதிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த அரசின் மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்ததோடு, அனுமதியை உறுதி செய்தது. 

அதன்படி,  தடை செய்யப்பட்ட பி எஃப் ஐ அமைப்பை சேர்ந்தவர்கள், சமூக விரோத தீய சக்திகள் லத்தி, காயமேற்படுத்தும் ஆயுதங்களை கொண்டு சென்று பேரணிக்குள் ஊடுருவி விடாமல், ஆர் எஸ் எஸ் பேரணியை எதிர்க்கும் அடிப்படை மதவாத, சாதிய சக்திகள், சனாதன எதிர்ப்பு, ஹிந்து எதிர்ப்பு  உள்ளிட்டவை தொடர்பாக பேரணி நடக்கும் இடங்களில் கோஷமிட அனுமதிக்காமல், பேரணிக்கு இடையூறு ஏற்படுத்தாமல் கண்காணிக்க வேண்டியது, பாதுகாப்பு கொடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை என்றே காவல்துறை தலைவரின் அறிக்கை இருந்திருக்க வேண்டும்.

யாரை காரணம் காட்டி அனுமதி மறுத்தீர்களோ, அவர்களை மறந்து விட்டு, காரணமே இல்லாமல் ஆர் எஸ் எஸ் பேரணியில் பங்கேற்போருக்கு அறிவுரை கூறுவது  ஏனோ?

சமீபத்திய செய்திகள்

news

உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!

news

ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?

news

பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

news

கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்

news

திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!

news

இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!

news

பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்