- மஞ்சுளா தேவி
சென்னை : இசையமைப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவியை இளைய தலைமுறையினருக்கு விட்டுக் கொடுக்குமாறு, தற்போதைய தலைவர் தீனாவுக்கு, இசைஞானி இளையராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்த் திரை இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தீனா இருந்து வருகிறார். இந்த சங்கத்தின் தலைவர் பொறுப்புக்கு பிறர் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சங்க நிர்வாகிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் தீனாவுக்கு, இசைஞானி இளையராஜா ஒரு செய்தி அனுப்பியுள்ளார். அந்த ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் இளையராஜா கூறியிருப்பதாவது:
தீனா அன்றே உங்களை எதிர்பார்த்தேன். நீங்கள் வருகிறதாக சொன்னீர்கள். இந்த யூனியனை ஆரம்பித்தது எம்பி சீனிவாசன். முதல் முதலாக திரைத்துறையில் ஒரு யூனியன் வந்தது என்றால் அது சினி மியூசிசியன் யூனியன் தான். இதை ஆல் இந்தியா லெவல்ல ஆரம்பித்திருந்தார்கள். இதுல சில விதிமுறைகளும் ஏற்படுத்தி இருந்தாங்க. இரண்டு வருடம் தான் பிரசிடெண்ட் ஆக இருக்கணும் என்று சொல்லி இருக்காங்க.
அதனால இப்ப இருக்கக் கூடிய மெம்பர்கள் வந்து, நீ இரண்டு முறை பதவியில இருந்து விட்டாய் மூன்றாவது முறையாக அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாமா.. என்று கேட்கிறார்கள். சில முறைகேடான விஷயங்கள் நடந்து இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். நான் இந்த விஷயத்திற்குள் போக விரும்பவில்லை தீனா. ஆனால் யூனியன்ல இருக்கின்ற மெம்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு தலைவனா இருக்கிற நீ அதை ஏற்றுக் கொள்வது தான் நல்லது என்று எனக்கு தோன்றுகிறது.
அதனால் தான் உனக்கு நான் நேரடியாக செய்தி அனுப்புகிறேன். நீ நல்லது செய்கிறாய். நல்லபடியாக நடத்துற என்பது வேறு விஷயம். ஆனால் நீ இரண்டு முறை யூனியன் பிரசிடெண்ட்டா இருந்துட்ட என்ற மனநிறைவு வேண்டும். அவர்களுக்கு நீ விட்டுக் கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}