- கவிதா அறிவழகன்
விடியல் என் முதல் காதல்,
விடியலின் சுவாசம் என் மூச்சு,
தூரத்து கோயில் மணி,
தூக்கத்தில் இருந்த என்னை,
துயிலெழுப்பும் ஒரு தாலாட்டு.
பனித்துளிகள் நனைந்த புற்களின் மீது,
பதிய நடந்த பாதம்,
நனைவதில் ஒரு பரவசம்.

இருளை மெல்ல விழுங்கிய
அழகிய விடியல்,
கதிரவனின் மென்மையான சிரிப்பு,
இதயத்தினுள் விதைத்த
புதிய ஒரு நம்பிக்கை.
குருவிகளின் கீச்சொலியில்
ஒரு ராகம்,
ஆன்மாவின் பன்முக ராகம்,
இயற்கை வாசிக்கும்,
மௌன கீதங்கள்.
விடியலின் சிவப்பு துளியில் ஜனித்த ரோஜா,
என்னை அழைத்தது,
அதன் ஸ்பரிசம்
மெய் மலரச் செய்தது.
தென்றலோ என்னை தழுவி செல்ல செல்ல,
நேற்றைய கவலைகளை
மறக்கடித்தது.
அன்பான விடியலே,
இன்றைய பொழுதினை,
அழகிய கவிதையாக
ஆற்றியது நீ தானோ...
(Kavitha Arivalagan, Creative Writers, Dharmapuri).
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!
சரியான முடிவு
{{comments.comment}}