- கவிதா அறிவழகன்
விடியல் என் முதல் காதல்,
விடியலின் சுவாசம் என் மூச்சு,
தூரத்து கோயில் மணி,
தூக்கத்தில் இருந்த என்னை,
துயிலெழுப்பும் ஒரு தாலாட்டு.
பனித்துளிகள் நனைந்த புற்களின் மீது,
பதிய நடந்த பாதம்,
நனைவதில் ஒரு பரவசம்.

இருளை மெல்ல விழுங்கிய
அழகிய விடியல்,
கதிரவனின் மென்மையான சிரிப்பு,
இதயத்தினுள் விதைத்த
புதிய ஒரு நம்பிக்கை.
குருவிகளின் கீச்சொலியில்
ஒரு ராகம்,
ஆன்மாவின் பன்முக ராகம்,
இயற்கை வாசிக்கும்,
மௌன கீதங்கள்.
விடியலின் சிவப்பு துளியில் ஜனித்த ரோஜா,
என்னை அழைத்தது,
அதன் ஸ்பரிசம்
மெய் மலரச் செய்தது.
தென்றலோ என்னை தழுவி செல்ல செல்ல,
நேற்றைய கவலைகளை
மறக்கடித்தது.
அன்பான விடியலே,
இன்றைய பொழுதினை,
அழகிய கவிதையாக
ஆற்றியது நீ தானோ...
(Kavitha Arivalagan, Creative Writers, Dharmapuri).
எல் நினோ எதிரொலி: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் வறட்சி அபாயம்
ரஜினியின் தலைவர் 173 பட டைட்டில் தர்மன்.. அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்!
கண்ணீருடன் கட்டித்தழுவிய ராமதாஸ்...நல்லது நடக்கும் நம்பிக்கை தெரிவித்த அன்புமணி
புயலை கிளப்பிய மேயர் பிரியாவின் பேச்சு...சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு
திரிஷா படத்தை வச்சே ஆகணும்...காரைக்குடி மாமன்ற கூட்டத்தில் சுவாரஸ்யம்
ருத்ர மந்திரத்தை மட்டுமே பற்றிக் கொண்டு .. சிவனை சென்றடைந்த.. ருத்ர பசுபதி நாயனார்
நான் பேசினாலே பிரச்சனை ஆகுது - தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு
வஜ்ஜிரவல்லி பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா.. செரிமானத்திற்கு அவ்வளவு ஹெல்ப் பண்ணும்!
Poem: கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
{{comments.comment}}