- கவிதா அறிவழகன்
விடியல் என் முதல் காதல்,
விடியலின் சுவாசம் என் மூச்சு,
தூரத்து கோயில் மணி,
தூக்கத்தில் இருந்த என்னை,
துயிலெழுப்பும் ஒரு தாலாட்டு.
பனித்துளிகள் நனைந்த புற்களின் மீது,
பதிய நடந்த பாதம்,
நனைவதில் ஒரு பரவசம்.

இருளை மெல்ல விழுங்கிய
அழகிய விடியல்,
கதிரவனின் மென்மையான சிரிப்பு,
இதயத்தினுள் விதைத்த
புதிய ஒரு நம்பிக்கை.
குருவிகளின் கீச்சொலியில்
ஒரு ராகம்,
ஆன்மாவின் பன்முக ராகம்,
இயற்கை வாசிக்கும்,
மௌன கீதங்கள்.
விடியலின் சிவப்பு துளியில் ஜனித்த ரோஜா,
என்னை அழைத்தது,
அதன் ஸ்பரிசம்
மெய் மலரச் செய்தது.
தென்றலோ என்னை தழுவி செல்ல செல்ல,
நேற்றைய கவலைகளை
மறக்கடித்தது.
அன்பான விடியலே,
இன்றைய பொழுதினை,
அழகிய கவிதையாக
ஆற்றியது நீ தானோ...
(Kavitha Arivalagan, Creative Writers, Dharmapuri).
ஏப்ரல் 2-ல் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய திமுக சார்பில் மனு
சென்னையில் விஜய்யின் 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி மறுப்பு: தவெக தொண்டர்கள் அதிர்ச்சி
அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி... சிதமுக.,விற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
மாம்பழத்தை இப்போது முடக்க முடியாது .. உறுதிபட சொன்ன தேர்தல் ஆணையம்
செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!
கால் வைத்த இடமெல்லாம் வெற்றித் தடம்.. சாதிக்கத் துடிக்கும் மாணவர் மோ.வசீகரன்!
RCB: அதை மட்டும் மாத்த மாட்டோம்.. கவலைப்படாதீங்க.. உறுதிப்படுத்திய அனன்யா பிர்லா
வரமும்.. வரம்பும்!
{{comments.comment}}