திரிஷா படத்தை வச்சே ஆகணும்...காரைக்குடி மாமன்ற கூட்டத்தில் சுவாரஸ்யம்

Jun 24, 2026,06:36 PM IST

சிவகங்கை:காரைக்குடி மாமன்றக் கூட்டத்தில், முதல்வர் விஜய்யின் படத்திற்கு அருகே முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்கக் கோரி பிற கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, சுயேச்சை உறுப்பினர் ஒருவர் "நடிகை திரிஷாவின் படத்தை வைக்க வேண்டும்" என விசித்திரமான கோரிக்கையை முன்வைத்ததால் கூட்டத்தில் பெரும் சிரிப்பலையும் பரப்பரப்பும் ஏற்பட்டது.


படங்களை வைக்கக் கோரி மாமன்றத்தில் ஆர்ப்பாட்டம்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த தற்போதைய முதல்வர் விஜய்யின் புகைப்படத்தின் அருகே, தங்களது கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்களான மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் படங்களையும் வரிசையாக வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாமன்ற அரங்கில் சற்றே சலசலப்பான சூழல் நிலவியது.


"திரிஷா படம்தான் வேண்டும்" :




அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை வைக்கக் கோரி உறுப்பினர்கள் ஒருபுறம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், அங்கு இருந்த சுயேச்சை மாமன்ற உறுப்பினர் மெய்யர் என்பவர் திடீரென எழுந்து ஒரு விசித்திரமான கோரிக்கையை முன்வைத்தார். அவர், மாமன்ற அரங்கில் "திரிஷா படத்தை வைத்தே ஆக வேண்டும்" என்று மிகவும் ஆக்ரோஷமாக வாதிடத் தொடங்கினார். மேலும், மாநிலத்தில் ஏற்பட்ட இந்த ஆட்சி மாற்றத்திற்கு காரணமே அவங்க தான் (திரிஷா) என்றும், எனவே அவரது படம் கண்டிப்பாக அங்கே இடம்பெற வேண்டும் என்றும் கூறி அங்கிருந்தவர்களுடன் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


அரங்கையே உலுக்கிய சிரிப்பலை:

அரசியல் தலைவர்களின் படங்கள் குறித்து தீவிரமான விவாதங்கள் போய்க் கொண்டிருந்த வேளையில், சுயேச்சை உறுப்பினர் மெய்யர் திடீரென நடிகை திரிஷாவின் பெயரை இழுத்து, ஆட்சி மாற்றத்திற்கு அவர்தான் காரணம் என்று மழுப்பலாகக் கூறி கோரிக்கை விடுத்தது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியது.


அவரது இந்த வினோதமான மற்றும் நகைச்சுவையான கோரிக்கையைக் கேட்ட மாமன்றத்தில் இருந்த மற்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் தங்களையும் அறியாமல் குலுங்கி குலுங்கி சிரிக்கத் தொடங்கினர். தீவிரமான வாக்குவாத களமாக இருந்த காரைக்குடி மாமன்றக் கூட்டம், இந்த ஒரு கோரிக்கையால் சில நிமிடங்களிலேயே பெரும் சிரிப்பலையாகவும், கலகலப்பாகவும் மாறியது. தற்போது இந்த சுவாரசியமான மாமன்றக் கூட்ட நிகழ்வு சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்

news

ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடு வழக்கு: முன்னாள் தேர்வாணையத் தலைவர் கிடாங்ணதே கைது

news

தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

news

சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!

news

நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!

news

சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

news

மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்

news

Monday Motivation: இயற்கையைக் கொ(வெ)ல்லும் செயற்கை.. நல்லதல்ல விரைந்து விழிப்படைவோம்!

news

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்