- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
கவியரசன் வடித்த வரிகளில் ..
வழிந்தோடுவது வார்த்தை அல்ல...
அவன் வாழ்க்கை ...
அவன் சிரித்தால் அது பாட்டாகும்...
அவன் காதலுற்றால்
அது கவியாகும் ...
அவன் தோல்வியும்
சரணமாகும்...
அவன் கோபதாபமோ
பல்லவியாகும்..

அவன் வேதனை ஒவ்வொன்றும்
தத்துவமாகும்...
அதனாலே அவன் பாட்டு
மனதை மயக்கும் நல்ல மெட்டாகும்...
பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகும்...
பாடலுக்காகவே
சிறு கூடலில் பிறந்தானோ ...
முத்தான வரி கொடுப்பான் என்று தான் ...
முத்தையா எனும் பெயர் பெற்றானோ...
காலங்கள் வென்று அவன் பாடல்கள் நிற்பதாலே ...
அவன்
காவிய நாயகன் கண்ணதாசன் ஆனானோ...
அவன் பேனா தொட்டாலே,
வார்த்தைக்கும் உயிர் வரும்..
காகிதமோ கவிபாடும்...
திரையுலகு மட்டுமின்றி
இலக்கியத் துறையிலும்
அவன் படைப்பு ஏராளம்..
காவிய நாயகன் கண்ணதாசன் புகழ் என்றுமே பாராளும்!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
எல் நினோ எதிரொலி: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் வறட்சி அபாயம்
ரஜினியின் தலைவர் 173 பட டைட்டில் தர்மன்.. அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்!
கண்ணீருடன் கட்டித்தழுவிய ராமதாஸ்...நல்லது நடக்கும் நம்பிக்கை தெரிவித்த அன்புமணி
புயலை கிளப்பிய மேயர் பிரியாவின் பேச்சு...சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு
திரிஷா படத்தை வச்சே ஆகணும்...காரைக்குடி மாமன்ற கூட்டத்தில் சுவாரஸ்யம்
ருத்ர மந்திரத்தை மட்டுமே பற்றிக் கொண்டு .. சிவனை சென்றடைந்த.. ருத்ர பசுபதி நாயனார்
நான் பேசினாலே பிரச்சனை ஆகுது - தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு
வஜ்ஜிரவல்லி பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா.. செரிமானத்திற்கு அவ்வளவு ஹெல்ப் பண்ணும்!
Poem: கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
{{comments.comment}}