டோக்கியோ பாணியில்.. தமிழ்நாட்டு நகரங்களில் ஹெல்த் வாக் சாலை.. நவம்பர் 4 முதல்!

Oct 22, 2023,03:51 PM IST

சென்னை:  டோக்கியோவில் உள்ளது போன்ற ஹெல்த் வாக் சாலைத் திட்டம் தமிழ்நாட்டுக்கும் வருகிறது. நவம்பர் 4ம் தேதி இந்த சாலைகள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தொடங்கி வைக்கப்படுகிறது.


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஹெல்த் வாக் டிராக் என்ற சாலை உள்ளது. அதாவது எட்டு கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. இது முழுக்க முழுக்க நடைப் பயிற்சி செய்வோருக்கான சாலையாகும். இங்கு யார் வேண்டுமானாலும் நடைப் பயிற்சி செய்யலாம்.


எட்டு கிலோமீட்டர் என்பது 10,000 அடிகளுக்குச் சமம். இந்த அளவுக்கு ஒருவர் ஒரு நாளைக்கு நடந்தால் உடல் நலம் சரியாக இருக்கும் என்பதால் இந்த எட்டு கிலோமீட்டர் டிராக் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் பிரபலமான ஹெல்த் டிராக் ஆகும்.




தற்போது இதே பாணியில் தமிழ்நாட்டிலும் ஹெல்த் வாக் சாலைகள் அமைக்கப்படவுள்ளன. மதுரையில் முதல் ஹெல்த் வாக் சாலை அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். இந்த டிராக்கானது, ரேஸ் கோர்ஸ் சாலை முதல் ஆத்திகுளம் சந்திப்பு வரை அமைக்கப்படுகிறது.


தற்போது இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் அமல்படுத்தவுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ஹெல்த் வாக் டிராக்கை நவம்பர் 4ம் தேதி தொடங்கி வைக்கிறார். சென்னையைப் பொறுத்தவரை முத்துலட்சுமி ரெட்டி பூங்கா  முதல் பெசன்ட் நகர் சர்ச் வழியாக சென்று மீண்டும் முத்துலட்சுமி ரெட்டி பார்க்கில் வந்து முடிவடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


இதேபோல ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் முக்கியமான சாலைகளில் இந்த ஹெல்த் வாக் டிராக்குகள் அமைக்கப்படுகின்றன. இந்த சாலைகளின் இரு புறமும் மரங்கள் நடப்படும். உடல் நலம் குறித்த விளக்க போர்டுகள் வைக்கப்படும். ஆங்காங்கே அமர்ந்து செல்ல இருக்கைகளும் அமைக்கப்படும். இந்த சாலைகளில் மாதம் ஒருமுறை வாக்கத்தான் போட்டிகளும் நடத்தப்படும். மக்களிடையே நடைப் பயிற்சி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க இந்த டிராக்குகள் உதவும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


அமைச்சர் மா.சுப்பிரமணியன் தினசரி தவறாமல் நடைப் பயிற்சி மேற்கொள்ளக் கூடியவர். அவர் எங்கிருந்தாலும் அங்கு வாக்கிங் போய் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அது மழை பெய்தாலும் சரி, மலைப் பகுதியாக இருந்தாலும் சரி, வெளிநாடாக இருந்தாலும் சரி, வெளி மாநிலமாக இருந்தாலும் சரி நடக்காமல் விட மாட்டார் மா.சுப்பிரமணியன். அந்தளவுக்கு உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். தற்போது அவரது முயற்சியால் தமிழ்நாடு முழுவதும் நடைப் பயிற்சி மேற்கொள்வோருக்காக சிறப்பு டிராக் வருவது குறிப்பிடத்தக்கது.


மக்களே இதைப் பயன்படுத்திக்கங்க.. தினசரி நடங்க.. நல்லாருங்க!

சமீபத்திய செய்திகள்

news

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

news

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!

news

2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!

news

குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்

news

2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!

news

Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!

news

அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி

news

அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்