தமிழகத்தில் வெப்ப நிலை லேசாக அதிகரிக்கும்.. தென் தமிழ்நாட்டில் லேசான மழைக்கு வாய்ப்பு!

Apr 15, 2024,05:55 PM IST

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே இன்றும் நிலவியது. ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது பொதுவாக இன்று இயல்பை ஒட்டி இருந்தது. வட தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 39 செல்சியஸ் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகள் தென்தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதியில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33 முதல் 37 செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.




மலைப்பகுதிகளில் 19 முதல் 29 செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக இன்று ஈரோட்டில் 39.4 செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சேலத்தை பொருத்தவரை வெப்பநிலை 38.6 செல்சியஸ் ஆக இருந்தது. சென்னை மீனம்பாக்கத்தில் 35.4 செல்சியஸ் வெப்பநிலையும், நுங்கம்பாக்கத்தில் 34.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.


மன்னார் வளைகுடாவில் கீழடுக்கு சுழற்சி


மன்னார் வளைகுடா பகுதியில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தென் தமிழகம் வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.


நாளை தென் தமிழகத்தில் ஒரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை எதிர்பார்க்கலாம். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவும். 17ஆம் தேதியை பொருத்தவரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.


வெப்ப நிலை உயரும்


18 மற்றும் 19 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த ஐந்து நாட்களில் அதிகபட்ச வெப்பநிலையானது தமிழகத்தில் படிப்படியாக இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டி வெப்ப நிலை பதிவாகும். அடுத்த 48 மணி நேரத்தைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும் வெப்பநிலை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவிக்கின்றது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்