உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது.. 50 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு.. பெரும் எதிர்பார்ப்பு

Jan 07, 2024,10:29 AM IST

சென்னை: சென்னையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.


உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 இன்று காலை நந்தம்பாக்கம் வர்த்தக மைய அரங்கில் கோலாகலமாக தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




50க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். 30,000க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். ஒரு டிரில்லியன் கனவுகள், டைட்டன்ஸ் ஆப் தமிழ்நாடு ஆகிய இலக்குகளுடன் இந்த மாநாட்டை தமிழ்நாடு பெரும் ஆர்வத்தோடு எதிர்நோக்கி உள்ளது.


170க்கும் மேற்பட்ட வர்த்தகப் பிரதிநிதிகளின் உரை மாநாட்டில் இடம் பெறவுள்ளது. 450க்கும் மேற்பட்ட முக்கிய தொழிலதிபர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர் . பல்வேறு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் இதில் கையெழுத்தாகவுள்ளன.


இந்தியா, அமெரிக்கா,  இங்கிலாந்து, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள் இங்கு அரங்கம் அமைத்துள்ளன. மாநாட்டு வளாத்தில் சிறுதொழில் முனைவோருக்கான அரங்கம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் அரங்கம், பல்வேறு நாடுகளின் அரங்கங்கள், ஸ்டார்ட்அப் தமிழ்நாடு அரங்கம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.


தமிழ்நாட்டில் நிலவும் தொழில் சூழல், தொழில் தொடங்குவதற்கான உகந்த கட்டமைப்புகள் உள்ளிட்டவை குறித்தும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு எடுத்துக்காட்டப்படவுள்ளது.


இந்த மாநாட்டின் மூலமாக தமிழ்நாட்டுக்கு பெரிய அளவிலான முதலீடுகள் வந்து சேரும் என்ற எதிர்பார்ப்பில் தமிழ்நாடு அரசு உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

அதிகம் பார்க்கும் செய்திகள்