சென்னை: தொடர்ச்சியாக 3வது ஆண்டாக ஆளுநர் உரை தொடர்பான சர்ச்சை நீடிப்பது சலசலப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் ஆர். என்.ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து பூசல் நிலவி வருகிறது. அவ்வப்போது அடங்குவது போல தெரிந்தாலும் கூட, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இது பெரிதாக வெடித்துச் சிதறுகிறது. குறிப்பாக ஆளுநர் உரை தொடர்பாக கடந்த 3 வருடமாக சர்ச்சை நிலவி வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு முதல் முறையாக பெரிய சர்ச்சை வெடித்தது.
2023ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி சட்டசபை கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்குவதாக திட்டம். ஆளுநர் ஆர். என். ரவியும் சட்டசபைக்கு வந்தார். ஆளுநர் உரையை வாசிக்க ஆரம்பித்த அவர் அதில் இடம் பெற்றிருந்த சில வரிகளைத் தவிர்த்து விட்டு வாசித்தார். மேலும் புதிதாக சில வாசகங்களையும் அவர் சேர்த்துப் படித்தார்.
அதன் பின்னர் எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக படிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் ஆளுநர் அவராக சேர்த்து வாசித்த வாசகங்கள் அவைக் குறிப்பில் இடம் பெறாது என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் வாசிக்கப்பட்டபோது ஆளுநர் ஆர். என். ரவி. அவையிலிருந்து வெளியேறிச் சென்றார்.
இதைத் தொடர்ந்து 2024ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி சட்டசபை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வழக்கம் போல கூட்டத் தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியபோது முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். அதன் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றார். மேலும் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள சில பகுதிகளை தன்னால் ஏற்க முடியாது என்று கூறி உரையை வாசிக்க மறுத்து அமர்ந்து விட்டார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு உரையை வாசித்தார்.
அதன் பின்னர் ஆளுநரின் செயல்பாடு குறித்து அப்பாவு சில கருத்துக்களைக் கூறினார். அவர் சொல்லி முடித்த அடுத்த நிமிடமே ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார். அவர் வெளியேறிய பின்னர் ஆளுநர் உரை சட்டசபையில் சமர்ப்பிக்கப்பபடியே அவைக் குறிப்பில் பதிவேற வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆண்டும் தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டதால் அதிருப்தி அடைந்து ஆளுநர் வெளியேறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்
திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!
இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை
{{comments.comment}}