BAN.. "ரசாயன வேதிப்பொருள் கலப்பு" எதிரொலி..  தமிழகம் முழுவதும் பஞ்சுமிட்டாய்க்கு தடை!

Feb 17, 2024,09:03 PM IST

சென்னை: பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன வேதிப்பொருள்கள் கலக்கப்படுவதால், தமிழகம் முழுவதும் பஞ்சு மிட்டாய் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


பஞ்சு மிட்டாயை விரும்பாதவர்களே இருக்க முடியாது. குட்டிக் குழந்தைகள் முதல்  பல் போன தாத்தா, பாட்டீஸ் வரை அத்தனை பேருக்கும் பிடித்த சுவையான ஒரு தின்பண்டம்தான் பஞ்சு மிட்டாய். ரோஸ் கலரில் பொசுபொசுவென இருக்கும் பஞ்சு மிட்டாயைப் பார்த்தாலே வயது மறந்து குழந்தையாகி டக்கென வாங்கி வாயில் வைத்து அது கரைவதை கண் மூடி சிலாகித்து சுவைப்பவர்கள் பலர்.


பஞ்சு மிட்டாயை சுவைத்து சாப்பிடுவதே ஒரு தனிக் கலைதான். கோவில் திருவிழாக்கள், கடற்கரைச் சாலை, சுற்றுலா தலங்கள், பொது இடங்கள் என பல்வேறு இடங்களில்  பஞ்சுமிட்டாய் விற்பனை எப்பொழுதும் விறுவிறுப்பாக நடைபெறும். குழந்தைகளை கவரும் விதத்தில், பல வண்ணங்களில் காட்சி அளிக்கிறது இந்த பஞ்சு மிட்டாய்.




குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும்  வசீகரிக்கும் தன்மை கொண்டது  பஞ்சு மிட்டாய். குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் சாக்கில், பெரியோர்களும்  இதை வாங்கி உண்டு மகிழ்வதும் உண்டு.  பஞ்சு மிட்டாய் சேலை கட்டி என்று சினிமாவில் பாடலே வைத்தார்கள் நம்ம கவிஞர்கள். அந்த அளவுக்கு பஞ்சு மீது மக்களுக்கு தனி மோகம் இருந்தது.. இன்றோ அதில் நஞ்சு கலந்து விட்டது.


கடந்த 9ம் தேதி புதுச்சேரியில் நடந்த உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனையில் பஞ்சு மிட்டாயில் அபாயகரமான வேதிப் பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரோடமின் பி என்ற  வேதிப்பொருள் இருப்பதும், அது மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்டதும் என்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து  

புதுச்சேரியில் அதன் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தடை விதித்தனர்.


இந்த நிலையில் தமிழ்நாட்டில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயிலும் நஞ்சுப் பொருள் கலந்திருப்பது உறுதியானதைத் தொடர்ந்து இங்கும் அதன் விற்பனைக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


டிவியில் - சினிமாவில் இனிமேல் நெப்போலியனும், குஷ்புவும் பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாட்டுப் பாடும்போது அதைப் பார்த்து ரசிப்பதோடு நாம நிறுத்திக்கணும்.. பஞ்சு மிட்டாயை மறந்தும் சாப்பிட்டு விடக் கூடாது.!

சமீபத்திய செய்திகள்

news

Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!

news

திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்